புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
கலைஞர் இராசையா ஸ்ரீதரனுக்கு இந்தியாவில் விருது

கலைஞர் இராசையா ஸ்ரீதரனுக்கு இந்தியாவில் விருது

இந்தியா திருவையாறு ஒளவை அறக்கட்டளை தமிழ் ஐயா கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த ஜுலை மாதம் 20ஆம் திகதியன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற திருக்கோயில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் - அனைத்துலக பதினோராவது ஆய்வு மாநாட்டின்போது ஈழத்து ஆன்மிக எழுத்தாளரும், வில்லிசைக் கலைஞருமான கலாபூஷணம் இராசையா ஸ்ரீதரனுக்கு ‘தெய்வத் தமிழ்ச் சுடர்’ என்ற விருது கிடைத்துள்ளது.

இவர் ‘ஈழத்து திருக்கோயில்களில் தெய்வத் தமிழ்க் கலையாம் வில்லிசைக் கலை’ எனும் பொருளிலான ஆய்வுக் கட்டுரையை இந்த மாநாட்டில் சமர்ப்பித்திருந்தமையால், மேற்படி விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கட்டுரை, மாநாட்டையொட்டி வெளியிடப்பட்டுள்ள சிறப்பு மலரிலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அ. கனகசூரியர்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.