இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழு அதன் 14ஆவது நினைவுப் பேருரையை இம்முறை கொழும்பு
தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் 24ம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடாத்த
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஞாபகார்த்தக் குழுவின் செயலாளர் எச். எச்.
விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்விற்கு தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் முன்னாள்
செயலாளரும் ஞாபகார்த்தக் குழுவின் தலைவருமான எம். வாமதேவன் தலைமையில் நடைபெற
உள்ளதோடு இலங்கையின் அரசியல் கலாசாரமும் சிறுபான்மையினரின் உள்முரண்பாடுகளும் என்ற
தலைப்பில் கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்
கலாநிதி எம். எஸ். அனீஸ் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.
இலங்கை மனவளக் கலை தலைவரும் ஞாபகார்த்தக் குழு உறுப்பினருமான பேராசிரியர் ஏ.
மதுரைவீரன் வரவேற்புரை நிகழ்த்துவதோடு திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும்
ஞாகார்த்தக் குழு உறுப்பினருமான தை. தனராஜ் நன்றியுரை வழங்கவுள்ளார்.
சுகுமாரன் விஜயகுமார் இரத்தினபுரி, கஹவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ஒபாத தோட்டத்தை
பிறப்பிடமாக கொண்டவர். தாய் தந்தையார் தோட்டத் தொழிலாளர்கள். பாடசாலை கல்வியை ஒபாத
இல 1 தமிழ் வித்தியாலயத்திலும் கஹவத்தை த.ம.வித்தியாலயத்திலும் மேற்கொண்டார். உயர்
கல்வியை கலைத்துறையில் மேற்கொண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைத்துறைக்கு
தெரிவானார். அரசியல் விஞ்ஞான பாடத்தை சிறப்புத் துறையாக கொண்டு கற்று, இளமாணிப்
பட்டத்தை பெற்றுக் கொண்ட இவர். மக்கள் தொழிலாளர் சங்கம் 2013ஆண்டு வெளியிட்ட
“கூட்டு ஒப்பந்தமும் தோட்டத் தொழிலாளர்களும்” என்ற நூலை தொகுத்துள்ளார்.
அத்துடன் முன்னாள் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் இர. சிவலிங்கத்தின் திரு
உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிப்பதோடு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை
விரிவுரையாளர் பெ. சரவணகுமார் பேருரையாளர் பற்றிய அறிமுகத்தை நிகழ்த்தவுள்ளார்.
இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு 2007ம் ஆண்டு வெளியிட்ட “இன முரண்பாடும் மலையக
மக்களும் பல்பக்கப் பார்வை” என்ற ஆய்வு நூலில் இன முரண்பாடும் மலையக மக்களும்,
இரத்தினபுரி மாவட்டம் பற்றிய விசேட ஆய்வு என்ற ஆய்வு கட்டுரை மூலம்
எழுத்துலகத்திற்கு அறிமுகமான சுகுமாரன் விஜயகுமார் இம்முறை நினைவுப் பேருரையை
நிகழ்த்துவதற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
மலையக மக்கள் வாழ்ந்து வரும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான இரத்தினபுரி கஹவத்தை
பிரதேசத்தில் அமைந்துள்ள ஓபாத தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட சுகுமாரன் விஜயகுமார்
அப்பிரதேச தோட்டப்பாடசாலையில் ஆரம்ப கல்வியைப் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில்
அரசியல் விஞ்ஞானத் துறையில் சிறப்பு இளமாணிப் பட்டம் பெற்றவர். மக்கள் தொழிலாளர்
சங்கம் 2013ம் ஆண்டு வெளியிட்ட தோட்டத் தொழிலாளர்களும் கூட்டு ஒப்பந்தமும் என்ற நூலை
தொகுத்தளித்த இவர், மலையத்தின் சமூக அரசியல் விடயங்கள் பற்றி பத்திரிகைகளில்
எழுதிவருகிறார். இளம் சமூக ஆய்வாளர்களை வெளிக்கொணர்ந்து அவர்களை ஊக்குவிக்கும்
சுகுமாரன் விஜயகுமார் இர. சிவலிங்கம் 14வது நினைவுப் பேருரையை நிகழ்த்துவதையிட்டு
நினைவுக்குழு மகிழ்வு கொள்வதாக எச். எச். விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு பேராசிரியர் எ. மதுரைவீரன் அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.