கடலில் வசிக்கும் மெல்லுடலிகள் வகையைச் சேர்ந்த உயிரினம் யானைக் கை சங்கு.
பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் இந்த அரிய வகை உயிரினம் வேகமாக அழிந்து வருகிறது.
‘யானைக்கை சங்கு கணவாய் மீன் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். தோற்றத்தில் யானையின்
தும்பிக்கையை போன்றே இருப்பதால் இதனை யானைக் கை சங்கு என்று அழைக்கிறார்கள்.
சுமார்
500 மில்லியன் வருடங்களுக்கும் மேலாக இதன் வெளிப்புற உருவ அமைப்பில் எந்த மாற்றமும்
இல்லாமல் அப்படியே இருந்து வருவதும் குறிப்பிடத் தக்கது.
இவற்றின் அழகிய வெளி ஓடானது
இந்த உயிரினத்தைப் பாதுகாக்கிறது. ஓட்டின் உள்ளே இருக்கும் அகன்ற பகுதியில் வாயுவை
நிரப்பிக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த வசதியால் தரையில் இருந்து குறைந்த தூரம்
மேல்நோக்கி மிதக்கவும் முடிகிறது. இதன் வெளி ஓடு இதனைப் பாதுகாத்தாலும் அதன் அழகே
அதற்கு எதிரியாகி மனிதர்களை கவர்ந்திழுக்கிறது.
எனவே இவற்றைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போய் இதன் எண்ணிக்கை
வெகுவாகக் குறைந்து வருகிறது.
குறைவான முட்டைகளே இடுவதாலும் இதன் எண்ணிக்கை மிகக் குறைந்துவிட்டது. கடலின் அடியில்
கிடக்கும் கழிவுகளைத் தின்று உயிர் வாழும் இந்த உயிரினம் கடலின் அடிப்பகுதி
சுத்தமாக இருக்கவும் உதவுகிறது.