சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் மூளை செயலிழந்த நிலையில் குழந்தையொன்றை
பிரசவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் உள்ள அல்கோபார் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான இந்தப் பெண் சாத்
என்ற இடத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டொக்டர்கள்
அந்த பெண்ணின் மூளை செயல் இழந்துவிட்டது என்றும் அவர் கர்ப்பிணியாக இருப்பதாகவும்
தெரிவித்தனர்.
அவர் வயிற்றில் வளரும் குழந்தையை கருத்தில் கொண்டு அவருக்கு செயற்கை முறையில் உணவு
கொடுக்கப்பட்டது. அதோடு நோய் எதிர்ப்பு மருந்துகளும் கொடுக்கப்பட்டன. அவர்
மூளைச்சாவு அடைந்த 4வது மாதத்தில் அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கு 28 வாரங்கள்
ஆன நிலையில் குழந்தையின் உடல் நிலை மோசமாகி வந்ததை தொடர்ந்த டாக்டர்கள்
சத்திரசிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர்.