புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

ஜோதிகாவுக்கு சிறந்த கணவராகவும் மகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருக்கிறார்

ஜோதிகாவுக்கு சிறந்த கணவராகவும் மகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருக்கிறார்

சூர்யாவுக்கு அனுஷ்கா புகழாரம்

சூர்யா சிறந்த நடிகர். நூறு சதவீத ஈடுபாட்டுடன் நடிப்பார். மனைவி ஜோதிகாவுக்கு சிறந்த கணவராகவும், மகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருக்கிறார் என்று நடிகை அனுஷ்கா பேட்டியொன்றில் கூறியுள்ளார். விஜய்யுடன் வேட்டைக்காரன் சூரியாவுடன் சிங்கம் படங்களில் நடித்தவர் அனுஷ்கா. தற்போது விக்ரமுடன் நடித்த தெய்வத் திருமகள் படம் ரிலீசாகியுள்ளது. அவருடனான பேட்டி வருமாறு,

கேள்வி : தெய்வத் திருமகள் படத்தில் நடித்த அனுபவம் எப்படி?

பதில் : தெய்வத்திருமகள் வித்தியாசமான படம். ஐந்து வயது சிறுவன் மனநிலை கொண்ட இளைஞனு க்கும் அவன் மகளுக்குமான பாசப் போராட்டமே கதை. எல்லா பாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது வரை நான் நடித்த பாத்திரங்களில் மிகவும் அற்புதமானது.

கே. : உங்கள் கேரக்டரில் என்ன விசேஷம்?

ப. : இதில் வழக்கறிஞராக வருகிறேன். வழக்கமான நாயகிபோல இல்லாமல் படம் முழுக்க என் பாத்திரம் அமைந்துள்ளது. ஒரு நடிகையாக நடிப்பை வெளிப்படுத்த போதிய வாய்ப்பு உள்ள படம்.

கே. : சிங்கம் பட கேரக்டரில் இருந்து இதில் உள்ள பாத்திரம் எப்படி மாறுபட்டுள்ளது?

ப. : சிங்கம் கமர்ஷியல் படம். பாடல் காட்சிகளில் கவர்ச்சி இருக்கும். ஆனால், இந்த படம் சிறப்பானது. திரைக்கதை அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் சிறப்பாக உழைத்துள்ளோம்.

கே. : இதுவரை நீங்கள் நடித்த நாயகர்கள் பற்றி?

ப. : விஜய் திறமைசாலி, ஆனால் அவரது திறமை இன்னும் சரியாக பயன்படுத்தப்படவில்லை.

சூர்யா நிறந்த நடிகர். நூறு சதவீத ஈடுபாட்டுடன் நடிப்பார். மனைவி ஜோதிகாவுக்கு சிறந்த கணவராகவும், மகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருக்கிறார். விக்ரம் நடிப்பு அசாத்தியமானது. அற்புதமான மனிதர். அவரைப் பார்த்து பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.