திருமண வைபவங்களின் போது காலணிகள் காணாமல் போகாமலிருக்க தான் ஒரு வழியைப் பின்பற்றி
வருவதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
அதாவது திருமண மண்டபங்களுக்கு வெளியில்
காலணிகளை பாதுகாக்கும் ஏற்பாடு செய்யப்படாமலிருந்தால் அவர் அணிந்துவரும் காலணிகளை
ஒவ்வொன்றாக வெவ்வேறு இடங்களில் வைத்துவிடுவாராம்.
வெளியில் வரும்போது இரண்டு
காணிகளும் தான் வைத்த இடங்களில் அப்படியே இருக்குமாம். இந்த வழியை எனையோரும்
பின்பற்றலாமென அவர் ஆலோசனை கூறுகிறார்.
ஆனால், திருமண வீடுகளில் காலணி திருடும்
பேர்வழிகள் இந்த விடயத்தில் உஷாராகிவிட்டால் அதுவும் சாத்தியமற்றதாகிவிடுமே.