விலைமாது வேடத்தில் ரீமா சென் பரபரப்பாக பேசப்படும் காட்சிகள்
விலைமாது வேடத்தில் ரீமா சென் பரபரப்பாக பேசப்படும்
காட்சிகள்
நடிகை ரீமாசென் விலைமாதுவேடத்தில் படுக்கை அறை காட்சிகளில் நடித்து பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளார். ‘இட ஸ்ரீகாந்தா’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் வங்காள மொழி
படத்தில் நடிகை ரீமாசென் நாயகியாக நடித்துள்ளார்.
கதைப்படி அவருக்கு விலைமாது வேடம்.
வறுமையின் காரணமாக பெற்றோர்களால் விலைக்கு விற்கப்பட்டு, ஒரு ஜமீன்தாரால் தாசி
பட்டம் சுமக்கிறார் அதன்பிறகு அவர் விலைமகளாக மாற்றப்பட்டு பல ஆண்களுடன்
பணத்துக்காக தொடர்பு வைத்துக்கொள்வது போல் கதை சொல்லப்பட்டு இருக்கிறது.
ஒரு
கட்டத்தில் அவர் தாசி வாழக்கையை வெறுத்து ஆசைப்பட்டவருடன் மனைவியாக வாழ
விரும்புகிறார். அவருடைய ஆசை நிறைவேறியதா? என்பதே படம். படத்தில் இடம்பெறும்
படுக்கைறை காட்சிகளில் ரீமாசென் ஆடையில்லாமல் துணிச்சலுடன் நடித்திருக்கிறார்.
இந்த
பரபரப்பான படுக்கையறை காட்சிகளை பார்த்த சென்சார் அதிகாரிகள் சில காட்சிகளை
நீக்கும்படி படக் குழுவினரிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் கதைக்கு மிகவும் தேவையான
காட்சிகள் என்பதால் படக் குழுவினர் நீக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து இட்
ஸ்ரீகாந்தாவுக்கு ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படம் லாட் பாலாஜி
பிலிம்ஸ் என்ற நிறுவனத்தால் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. ‘இளவரசி’ என்ற
பெயரில் தமிழில் இப்படம் வெளியாகவிருக்கிறது.