சப்ரகமுவ மாகாண சபை தேர்தலிலே தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்து வதற்காக
அரசாங்கத்தின் பங்காளி கட்சி களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள்
முன்னணியுடன் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கூட்டணி அமைத்திருப்பது
வரவேற்கத் தக்கது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளு மன்ற
உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தென்னிலங்கையிலுள்ள சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதை
அனைத்து கட்சிகளும் இன்று ஏற்றுக்கொள்கின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸை இணைத்துக்
கொண்டுதான் சப்ரகமுவ தேர்தலில் களமிறங்க வேண்டுமென முதன் முதலில் தெளிவான
காரணத்துடன் கருத்து தெரிவித்தது நாம்தான். இன்று அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெறும் பிரதிநிதித்துவத்தின் மூலம் சரிந்து கிடக்கும் சப்ரகமுவ தமிழ் கல்வி
துறையை மீள் கட்டியெழுப்ப முடியும். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சுகாதாரத்திற்கான
அபிவிருத்தியை ஏற் படுத்த முடியும்.
மாகாண சபை மூலமாக கிடைக் கப்பெறும் வரப்பிரசாதங்கள் சப்ரகமுவ மாகாண தமிழ்
மக்களுக்கும் சென்றடைய வேண்டும். இதற்காகவே தமிழ் பிரதி நிதித்துவம்
அவசியப்படுகின்றது என்பதை எல்லோரும் புரிந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது.