தமிழரின் இரத்தத்தாலும், சதையாலும் உருவான அமைப்பே தமிழ் கூட்டமைப்பு
நான் பெரியவன், நீ சிறியவன் என்ற பேச்சு எழக்கூடாது
தமிழரின் இரத்தத்தாலும், சதையாலும் உருவான அமைப்பே தமிழ் கூட்டமைப்பு
பங்குபோட, பரிகாசம் செய்ய, பிளவுபடுத்த இடமில்லையென்கிறார் செல்வம் எம்.பி
தமிழ் மக்களின் இரத்தத்தாலும் சதையினாலும் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை
அழிப்பதற்கு அதனுள் இருப்பவர்களுக்கு எந்த உரிமையும் அருகதையும் இல்லையென வன்னி
மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரா ளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின்
தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மக்களால் உருவாக்கப்பட்டது. சின்னத் தனமான
நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டமைப்பை தொலைப்பதற்கான எந்த அருகதையும் உரிமையும் அதில்
இருப்ப வர்களுக்கு இல்லை.
இது மக்களின் இரத்தத்திலும் சதையிலும் உருவான அமைப்பு.
மக்களின் சிந்தனைக் கருவோடு நாங்கள் செயற்பட வேண்டும். நான் பெரியவன், நீ சிறியவன்
என்று நடந்துகொண்டால் அது மக்களை பாதிக் கும் நிலைக்கே கொண்டு செல்லும்.
எங்களைப் பொறுத்தவரையில் அந்த நிலைவராத வகையில் செயற்பட்டு வரு கின்றோம். அதனை
எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இது தனிப்பட்ட ஒருவருக்கு உரித்தானதல்ல. மக்கள்
சக்தியைக் கொண்டது. இந்த மக்களின் சக்தியை நாங்கள் சிறிதாக கணக்குப்போடு வோமானால்
அது எங்களின் தவறே தவிர மக்களின் தவறல்ல.
இந்த நிலையில் எல்லோரும் நிதானமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வழி நடத்திச்
செல்ல வேண்டிய தமது பொறுப் பினை உணர்ந்துகொண்டால் பிளவு என்ற செய்திகளுக்கு
வாய்ப்பிருக்காது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.