கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ் வரர் ஆலயத்தில் இன்று 15ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கன்னி லக்ன சுபமுகூர்த்தத்தில் அந்தரித மஹா
கும்பாபிஷேகம் நிகழும்.
இதற்கான மஹா கணபதி ஹோமம் அதிகாலை ஆரம்பமானது. தொடர்ந்து
கும்பாபிஷேகக் கிரியைகள் தின மும் இடம்பெறும் என ஆலய தர்மகர்த்தா டி.எம்.சுவாமிநாதன்
தெரிவித்தார். பழனி வேதாகம பாடசாலை அதிபர் சிவாகம சிரோன்மணி சோ. பாலசுப்பிரமணிய
சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறும்.
சர்வசாதகா சார்யராக காஞ்சிபுரம் வியா கர்ண சிரோன்மணி சிவஸ்ரீ ஜே.கிருஷ்ண மூர்த்தி
சிவாச்சாரியாராக இருப்பார். தேவஸ்தான சிவாச்சாரியர்களான சிவஸ்ரீக்கள்
ஜயசந்திரக்குருக்கள், சந்திர குமாரக்குருக்கள், சுரேந்திரக்குருக்கள்,
பாலசுப்பிரமணியக் குருக்கள், முரளிதரக் குருக்கள் ஆகியோர் அனுசரணையாகக் கும்பாபிஷேக
கிரியை களில் பங்கேற்பர்.