புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
இரண்டு வருடங்களுக்கு நீடித்தது இந்தியா!

விடுதலைப் புலிகள் மீதான தடை:

இரண்டு வருடங்களுக்கு நீடித்தது இந்தியா!

குடிமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தமிbழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை இந்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளதாக அறிவித் துள்ளது.

இந்திய சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருத்திற்கொண்டு அதனை தடை செய்துள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சின் செயலாளர் தர்மேந்திரா ஷர்மா தெரிவித்தார்.

விடுதலை புலிகள் இயக்கமானது 1991 ஆம் ஆண்டு முன் னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படு கொலைக்கு பின்னர் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதன் பின்னதாக இந்த தடை உத்தரவானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.