பெண்கள் கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிடுகிறார்களோ அதைப் பொறுத்து தான் வயிற்றில்
வளரும் குழந்தையின் ஆரோக்கியம் உள்ளது. அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள்
எடுத்துக்கொள்ளும் சரியான உணவுகளின் மூலமே குழந்தையின் மன வளர்ச்சியும், உடல்
வளர்ச்சியும் உள்ளது.
எனவே தான் பெண்களை கர்ப்ப காலத்தில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து
உட்கொள்ளச் சொல்கின்றனர். கர்ப்ப காலத்தில் தண்ணீரை அதிகம் குடிப்பதுடன்,
நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கும் பானங்களை பருக வேண்டும். இப்போது கர்ப்பிணிகள்
குடிப்பதற்கு உகந்த ஆரோக்கிய பானங்களைப் பார்க்கலாம்.
கர்ப்பிணிகள் க்ரீன் டீ குடிப்பது நல்லதல்ல. ஆனால் உண்மையில் கர்ப்பிணிகள்
கர்ப்பகாலத்தில் அளவாக குடித்து வந்தால், ஆரோக்கியமாக இருக்கலாம். குறிப்பாக கர்ப்ப
காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடல்
ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கர்ப்பிணி பெண்களுக்கு பால் பொருள்களை எடுத்து கொள்வதால் அவர்களின் உடலில்
நீர்ச்சத்து மட்டுமின்றி, கால்சியமும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, பாலானது
செரடோனின் அளவை அதிகரித்து, மனதை அமைதிப்படுத்தும். ஆகவே கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு
2 முறை தவறாமல் பால் குடிக்க வேண்டும்.
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால், இதனை கர்ப்பிணிகள் குடித்தால்,
நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றல் அதிகரித்து, கர்ப்ப காலத்தில் நோய் தாக்கத்தில்
இருந்து விடுபடலாம். அதுமட்டுமின்றி, ஆரஞ்சு ஜூஸ் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை
வெளியேற்றவும் உதவியாக இருக்கும்.
கர்ப்பிணிகளுக்கு அவகேடோ மிகவும் ஆரோக்கியமான பழம். எனவே அத்தகைய பழத்தை ஸ்மூத்தி
போன்று செய்து குடித்தால், இரத்த அழுத்தம் சீராக இருப்பதுடன், உடலில் உள்ள மன
அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களும் சீராக இயங்கும்.
கர்ப்ப காலத்தில் காலை வேளையில் ஏற்படும் சோர்விற்கு கர்ப்பிணிகள் இஞ்சி டீ வைத்துக்
குடித்தால், அதனை உடனே சரி செய்யலாம். அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி கள் இஞ்சி டீயை
குடிக்கும் போது, அவர்க ளின் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.
எடைகுறைந்த குழந்தையின் உணவு முறை
எடைகுறைந்த குழந்தைகளுக்கு உணவு என்பது தாய்ப்பால், பால் பீய்ச்சி கொடுப்பது,
தாய்ப்பால் கொடுப்பவர்களிடமிருந்து வாங்குதல், அதிக சத்து நிறைந்த பால் ஆகியவற்றுள்
ஒன்றாக இருக்கலாம். குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும்
நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
பிற தாய்மார்களிடமிருந்து குழந்தைக்குக் கொடுக்கப்படும் பால் டோனர் பால் எனப்படும்.
டோனர் பால் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி தடைபடுகிறது என்று ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குக் கொடுப்பதன்
மூலம் குழந்தையின் எடை அதிகரிக்கிறது.
எந்த ஆராய்ச்சிகளும் மாட்டின்பால் நல்லது என்று கூறவில்லை. குறை பிரசவத்தில் பிறந்த
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் சிறந்த பால் தாய்ப்பால் இல்லாத நேரத்தில் பால்பொடி
மூலம் பால் கொடுக்கலாம்.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் கொடுப்பதைத் தடுக்கவும் 32 வாரத்திற்கு மேல் குழந்தை
பிறந்தால் தாய்ப்பால் கொடுக்கலாம். 32 வாரங்களுக்குக் கீழ் இருந்தால் குழாய் மூலம்
தாய்ப்பால் பீய்ச்சி எடுத்து கொடுக்கலாம். குறைப்பிரசவத்தில் பிறந்த
குழந்தைகளுக்குக் குழாய் மூலம் பால் கொடுப்பது மிகவும் நல்லது.
32 வாரத்திற்கு கீழ் பிறந்த குழந்தைகளுக்கு பிறந்த ஒரு வாரத்திற்குக் குறைந்த அளவு
பால் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதனால் குழந்தையின் குடல் வளர்ச்சி அடையும்.
குறைந்த அளவு பால் கொடுப்பதன் மூலம் குடல் அழற்சி போன்ற நோய்கள் தடுக்கலாம். குறைப்
பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உறிஞ்சும் தன்மை அதிகமாக இருந்தால் நேரடியாக
தாய்ப்பால் கொடுக்கலாம். உறிஞ்சும் தன்மை குறைவாக இருந்தால் கப், ஸ்பூன், பாலாடை
மூலம் பால் கொடுக்கலாம்.
குழந்தையின் எடையைப் பொறுத்தும், கருதாங்கல் வாரங்களைப் பொறுத்தும் எத்தனை முறை பால்
கொடுக்கலாம் என்பதை நிர்ணயிக்கலாம். பொதுவாக இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு
ஒரு முறை பால் கொடுக்கலாம்.
தாய்ப்பாலில் குழந்தைக்கு போதுமான அளவு வைட்டமின் டி ஊட்டச்சத்து இல்லை. இதனால்
குழந்தைகளுக்கு வைட்டமின் ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே
குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு வைட்டமின் டி 400 கொடுக்க வேண்டும்.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு எலும்பில் கல்சியம், பாஸ்பரஸ் அளவு குறைவாக
இருக்கும். எனவே கல்சியம் 120 140 மி.கி.ஃ.கி.கிஃ நாள் மற்றும் பாஸ்பரஸ் 60-90
மி.கி.ஃ.கி.கிஃ நாள் கொடுக்க வேண்டும்.
குழந்தையின் எடை, தலைச்சுற்றளவு, நீளம் மற்றும் மார்பகச் சுற்றளவு பார்க்க வேண்டும்.
அதன் மூலம் வளர்ச்சி குன்றிய குழந்தைகளை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
பெண்களே காதல் தோல்வியிலிருந்து
விடுபட வழிகள்
காதல் இரண்டு வகை உண்டு. ஒன்று திருமணத்திற்கு முன், இன்னொன்று திருமணத்திற்கு பின்.
இந்த இரண்டு வகைகளால் காதல் பிரியும் போது, ஏற்படும் துயரத்தில் இருந்து பிரிவது
என்பது மிகவும் கடினம்.
அப்படிப்பட்ட காதல் பிரிவு துயரத்தில் இருந்து மீள்வதற்கு ஒருசில வழிகள் உள்ளன.
அந்த வழிகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றி அந்த துயரத்தில் இருந்து
வெளிவர முயற்சி செய்யுங்கள்.
ஆரம்பத்தில் நம் துணைவர் மற்றொரு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருப்பதை நம் மனம் ஏற்காது.
முதலில் நம்ப மறுக்கும். நாம் இருக்க வேண்டிய இடத்தில் மற்றொருவர் என்பதை முற்றிலும்
மனம் ஏற்க இயலாது.
பிரிவு நிச்சயம் என்று தெரிந்த பின் உங்களால் ஆத்திரத்தை அடக்க இயலாது. உடல் நிலை
மோசமாக மாறும். எந்த செயலையும் செய்ய முடியாது. வேலைக்கு செல்லாமலும், அன்றாட
வேலைகளையும் செய்ய முடியாமலும், எப்போதும் காதல் நினைவையே மனம் நாடும். நடந்தவற்றையே
நினைத்து சிந்தித்து கொண்டிருப்பர்.
பின் பொருட்களை தூக்கி உடைப்பது, கத்துவது, அனைவரிடமும் சண்டை போடுவது மற்றும் தன்
சுய கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்வது போன்றவைகள் நிகழும். அழுது புலம்புவர். சில
நாட்களுக்கு பின் இந்த நிலை மாறும். ஆனால் மனதில் வலி மட்டும் வேரூன்றி இருக்கும்.
இந்த நிலை போக போக சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்.
ஆரம்பத்தில் வன்முறை செயலில் ஆத்திரம் கொண்டு, பின் அந்த வலியிலிருந்து மீண்டு,
மனமானது கல்லாகி, ஒரு சாதாரண நிலையை அடைந்திருப்பீர். இந்த நிலையில் தான் பொதுவாக
நீங்கள் சமரச கருத்து தொடங்குவது அல்லது விவாகரத்து பற்றிய முடிவு எடுப்பது நடக்கும்.
ஆழமான காயம் கொண்டிருந்தாலும், நடைமுறை வழக்கிற்கு ஏற்றவாறு முடிவு எடுப்பது நல்லது.
அதை விட்டு பழி வாங்குவது என்பது முட்டாள்தனம். ஆகவே இந்த நேரத்தில்
துயரத்திலிருந்து வெளிவர வாழ்க்கையின் இலக்குகளை அடைய மிகுந்த ஆர்வத்தை காட்டலாம்
அல்லது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதை பற்றி யோசித்து முடிவெடுக்கலாம்.
உங்கள் துணைவருடன் சென்றிருந்த சில இடங்கள், பொருட்கள், மற்றும் நினைவூட்டும்
அனைத்தையும் மனதில் இருந்து அழிப்பது நல்லது. காதல் கொண்ட வேளையில் கேட்ட சில
பாடல்கள், அவர்களுடன் சென்ற ஹோட்டல்கள் அல்லது அவர்கள் கூறிய வார்த்தைகள், அவர்களால்
ஏற்பட்ட நட்பு, உறவுகள் போன்ற அனைத்தையும் தவிர்ப்பது நல்லது.
காதல் தோல்வி அடைந்த உடனே வேறு ஒருவரை நம்பி திருமணம் செய்து கொள்ள வேண்டாம். சில
நாட்கள் கழித்து பழகி, பேசி, ஒருவரை புரிந்து பின் திருமணம் முடிப்பது நல்லது.
உங்கள் வாழ்க்கைக்கு மற்றொரு நபரை தேர்ந்தெடுக்கும் முன் யோசித்து செயல்பட வேண்டும்.
இதனால் மறுபடியும் ஏமாற்றம் அடையாமல் இருக்கலாம்.
தலைமுடி மாயமாகும்
மாயம் என்ன?
தலைமுடி உதிர முக்கிய காரணம் ஒருவரின் கவலை தான். குறைந்த பட்சம் எட்டு மணி நேரம்
தூக்கம் அவசியம். ஆறு மணி நேரமாவது தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தலைமுடி ஆரோக்கியத்துக்கும் இது தேவை. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு கவலை தானாக வரும்.
அப்படியிருக்கும் போது, முடிகொட்டத் தான் செய்யும். தலைமுடி, இந்த இரண்டு வகையில்
எந்த டைப் என்று தெரிந்து கொண்டால் தான் நாம் அதற்குரிய ஷாம்பூவை தேர்ந்¦டுக்க
முடியும்.
ஆயில் முடியுள்ளவர்கள், அந்த ஆயிலை நீக்கி சீராக்கும் வகையில் உள்ள டீப் கிZன்சிங்
ஷாம்பூவை பயன் படுத்த வேண்டும். வரண்ட தலைமுடி உள்ளவர்கள், கண்டிஷனர் தரம் அதிகம்
உள்ளதும், எஸ். எல். இ. எஸ். என்று அழைக்கப்படும் இரசாயனம் கலந்து
ஷம்யூவை
பயன்படுத்தினால் நல்லது.
ஆண்களில் முடிகொட்டி வழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. வானிலை, தண்ணீர்,
கவலை ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் தான் பலரின் வழுக்கைக்கு பின்னால் உள்ளவை. கோடை
வெயில் பிளந்தாலும், அதிக பனி பெய்தாலும் சிலருக்கு முடிவில்லா பிரச்சினையாக தான்
உள்ளது. கோடையில் வியர்த்து எண்ணெய் முடியாகி விடுவதும், பனிக்காலத்தில், முடிகள்
வரண்டுபோவதும் இவர்களுக்கு நேர்வதுண்டு.
எந்த சத்து தேவை?
முடிக்கு எந்த சத்துக்கள் தேவை தெரியுமா? ஒன்று இரும்புச்சத்து. மற்றது புரோட்டீன்.
இந்த இரண்டும் மிக முக்கியமானவை. இவற்றில் குறைபாடு இருந்தால். தலைமுடி கொட்டும்
ஆண்களுக்கு வழுக்கை ஏற்படும். சிலர் குண்டாக இருந்தாலும், இரத்தசோகை இருக்கும்.
அதுபோல, சிலருக்கு புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும். இவர்களுக்கு முடிகொட்டுவதை
வைத்தே இதை தெரிந்து கொள்ளலாம்.
அதுபோல, இரத்தத்தில் பெர்ரட்டின் அளவை வைத்தே, இரத்த சோகை அளவை கண்டுபிடிக்கலாம்.
பெண்கள் ஹேர் N'வ்
பண்ணும் போது
செய்ய கூடாதவை
பெண்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்க உடலில் உள்ள முடிகளை ஷேவ் செய்வது வழக்கம்.
ஆனால், அவ்வாறு ஷேவிங் செய்யும் பெண்கள் பல தவறுகளை செய்கின்றனர். அதனால்
அவர்களுக்கு சரும பிரச்சினைகள், சரும எரிச்சல்கள் எல்லாம் வருகின்றன. சருமத்தில்
முடிகளை அகற்ற ஷேவிங் செய்யும் பெண்கள் சில விஷயங்களை தெரிந்து செய்வது நல்லது.
நீங்களாகவே சிலவற்றை தெரியாமல் செய்து, பின் அவதிக்குள்ளாகாதீர்கள். எப்போதுமே
பெண்கள் குளிப்பதற்கு முன்பே கால்களில் இருக்கும் முடியை ஷேவிங் செய்து விடுவார்கள்.
ஆனால், அப்படி செய்வதை விட, நீங்கள் குளித்த பிறகு ஷேவிங் செய்வது நல்லது. ஏனெனில்,
ஈரமான பிறகு முடி இலகுவாகிவிடும். எளிதாக ஷேவிங் செய்துவிடலாம். மற்றும் எரிச்சல்
மிக குறைவாக இருக்கும். பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக
கால்களில் உள்ள முடிகளை ஷேவிங் செய்வார்கள். ஆனால், இரவு முழுவதும் உறங்கி எழுந்த
பின், சருமமும், முடியும் சற்று கடினமாக இருக்கும். அதனால், முடிந்த வரை இரவு தூங்க
போகும் முன்னரே ஷேவிங் செய்துவிடுவது நல்லது.
எப்போதுமே கால்களில் உள்ள முடிகளை ஷேவிங் செய்யும் போது முதலில் கீழ்வாறாக ஷேவிங்
செய்யுங்கள். பின்பு நன்கு நீரில் கழுவிய பிறகு. மறுபடியும் ஃப்போம் அப்பளை செய்து.
மேல்வாறாக ஷேவிங் செய்யுங்கள்.
ஒரு வேளை உங்களது சருமம் மிக மென்மையாக இருந்தால் மேல்வாறு ஷேவிங் செய்வதை
தவிர்த்துவிடுங்கள். ஷேவிங் செய்யும் போது, எப்போதும் ஷேவிங் லோஷன் வைத்திருக்க
வேண்டும். ஒருவேளை எரிச்சல் ஏற்பட்டாலோ அல்லது சிராய்ப்புகள் ஏற்பட்டாலோ லோஷனை
உபயோகப்படுத்துவது அவசியம். இல்லையெனில் காயங்கள் எளிதில் ஆறாது.
இரவில் படுக்கும் முன் தவறாமல்
செய்ய வேண்டியவைகள்!
அழகாக இருக்க வேண்டுமெனில் மேக்கப் போட்டால் மட்டும் போதாது. சருமத்திற்கு
அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். குறிப்பாக இரவில் படுக்கும்
போது ஒருசில செயல்களை தவறாமல் மேற்கொண்டு வந்தால் தான் அழகை பராமரிப்பதோடு,
அதிகரிக்கவும் முடியும்.
இங்கு அழகை அதிகரிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இரவில் படுக்கும் போது தவறாமல்
பின்பற்ற வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து இன்றிலிருந்து
பின்பற்றி வாருங்கள். அழுக்குகளை நீக்குங்கள். இரவில் படுக்கும்போது, முகத்திற்கு
போட்டுள்ள மேக்கப்பை கட்டாயம் நீக்க வேண்டும். மேலும் நாள் முழுவதும் மாசுக்கள்
நிறைந்த சுற்றுச்சூழலில் இருந்ததால், தவறாமல் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ
வேண்டும்.
கலோரி குறைவான உணவுகள்: காலையில் எழுந்த பின் உங்கள் சருமம் மென்மையாக இல்லையா?
அப்படியெனில் இரவில் படுக்கும் போது கலோரி குறைவான டயட் அல்லது சாலட் மற்றும் ஜுஸ்
போன்றவற்றை எடுத்து வாருங்கள். இதனால் பஞ்சு போன்ற சருமத்தைப் பெறலாம்.
பிரசவத்திற்கு பின் வரும் முதுகு வலியை
போக்கும் ஜசோமெட்ரிக் பயிற்சிகள்
பெரும்பாலும் பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகுவலிக்கு மிக முக்கிய
காரணம் அவர்களின் பிரசவ காலத்தில் அவர்கள் நிற்கின்ற போதும் நடக்கின்ற போதும்
வயிற்றை முன் தள்ளி நிற்க பழகிவிடுகின்றனர்.
பிரசவத்திற்கு பின்பும் அதே நிலை நீடிப்பதால் முதுகு எலும்பு மற்றும் எலும்பின்
நடுவில் இருக்கும் மிருதுவான பகுதி பாதிப்பிற்குள்ளாகின்றது அதே போல் இப்போது
வலியற்ற பிரசவத்திற்காகவும் மற்றும் சிசேரியன் செக்ஷன்காககவும் முதுகுத்தண்டில்
ஏற்றப்படும் ஊசிகளால் முதுகெலும்பு பல பின் விளைவுகளை சந்திக்கின்றது. பெரும்பாலும்
முதுகெலும்பினை நேராக வைத்து அமர்வதற்கும் நடப்பதற்கும் பழகிக் கொண்டாலே பல
பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
ஜசோமெட்ரிக் பயிற்சிகள் பெரும்பான்மையாக குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான வலிமையை
தருவதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றது. சாதாரண உடற்பயிற்சிகளை விடவும் ஜசோமெட்ரிக்
பயிற்சிகள் மிகச் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுவதால் இன்றும் பாடி பில்டர்கள்
தங்கள் உடலை வலுவாக்க இப்பயிற்சியினை மேற்கொள்கின்றனர்.
1. டேபிள் டாப் எனப்படும் நிலைக்கு முதலில் நேராக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி
90 டிகிரி அளவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் முதுகெலும்பை சற்று கவனத்தில்
கொண்டு வந்து பாருங்கள். அதில் லேசான வளைவு கண்டிப்பாக இருக்கும். இப்போது வளைவுடன்
இருக்கும் முதுகெலும்பை முடிந்த அளவு நேராக்கி சில நிமிடங்கள் அதே நிலையில் இருக்க
பழகிக்கொள்ள வேண்டும்.
2. இரண்டாவது நிலை... பெல்விக் ப்ரிட்ஜிங் கால்களை மடக்கி வைத்துக்கொண்டு இடுப்பு
பகுதியினை மட்டும் முடிந்த அளவு உயர்த்தி அதே நிலையில் 30 வினாடிகள் இருத்தல்
வேண்டும். இது போல் 3 செட்கள் அவசியம்.
3. பைலேட்ஸ் கிரன்ச் கால்களை 90 டிகிரியளவில் மடக்கி வைத்துக்கொண்டு உடலை மேல்
நோக்கி முடிந்த அளவு கொண்டு வந்து 30 செகண்ட்கள் இருத்தல் வேண்டும்.
4. குப்பறப்படுத்துக்கொண்டு இருகால்களையும் ஒன்றாக்கி முட்டியை மடக்காமல் எவ்வளவு
தூரம் மேல் நோக்கி தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் மேல் தூக்கி நிறுத்த வேண்டும்.
5. பிரண்ட் ப்ரிட்ஜிங். குப்பறபடுத்த நிலையில் கைகளை ஊன்றி உடலை மட்டும் மேல் நோக்கி
கொண்டு செல்ல வேண்டும். குறைந்த பட்சமாக 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.
இப்பயிற்சியின் போது முதுகெலும்பு நேராக இருத்தல் அவசியம்.
6. ஏர் பிளானிங். வலது காலையும் இடது கையையும் தரையில் ஊன்றிக் கொண்டு முதுகெலும்பை
வளைக்காது உடலை நேராக்குங்கள். இந்த நிலையை சூப்பர்மேன் போஸ் என்றும் ஏர் பிளானிங்
என்றும் கூறுவர்.
சமையல்
தேவையான பொருட்கள்
இனிப்பு ரொட்டி
(ஸ்வீட் பிரட்) -1 பக்கெட்
5 கிராம் முந்திரி
5 கிராம் திராட்சை
சர்க்கரை 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
செய்முறை
முதலில் பிரிட்டை துண்டுகளாக்கி மிக்சியில் போட்டு பொடியாக்கி கொள்ளவும். பிறகு
வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, திரா ட்சை ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து பிரட் தூள், சர்க்கரை போட்டு நன்கு கலந்து சூடா
னதும் அடுப்பை அணைத்து விடவும். லேசாக சூடு இருந்தால்தான் சர்க்கரை நன்றா கக் கலந்து
இருக்கும். அதன் பிறகு துருவிய தேங்காய், ஏலப் பொடி, சேர்த்து நன்றாக கலக்கவும்.
இடியப்ப பிரியாணி
இரண்டு பேருக்கு அளவாக
தேவையான பொருட்கள்
இடியப்பம் 12
உருளைக்கிழங்கு 1
கரட் 1
லீக்ஸ் 1
கோவா (விalpagலீ) துண்டு
வெங்காயம்
கஜூ-10
பிளம்ஸ் சிறிதளவு
நெய் அல்லது பட்டர் - 4 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள், ஏலக்காய் தூள் - சிறிதளவு உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை
கரட்டை துருவி வைத்துக் கொள்ளுங்கள். கிழங்கு, லீக்ஸ், கோவா, வெங்காயம் ஆகியவற்றை
மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
இடியப்பத்தை உதிர்த்து வையுங்கள்.
பாத்திரத்தில் நெய் விட்டு கிழங்கு வதங்கிய பின், வெங்காயம் போட்டு அவிந்த நிறம்
வரும் வரை வதக்குங்கள். கஜூ, பிளம்ஸ் போட்டு வறுத்து, கரட் லீக்ஸ், கோவா சேர்த்து 2
நிமிடங்கள் பிரட்டிக் கொள்ளுங்கள்.
மிளகு தூள் ஏலத்தூள் உப்புப் போட்டு உதிர்த்த இடியப்பம் போட்டுக் கிளறி எடுத்து
சேவிங் பிளேட்டில் போட்டி அலங்கரிக்குக் கொள்ளுங்கள். (இத்துடன் பட்டாணிக்கறி,
சோயாக்கறி, கத்தரிக்காய்ப் பிரட்டல், கிழங்கு மசாலா, அச்சாறு, சலட், கட்லற் அல்லது
வடை வைத்துப் பரிமாறிக் கொள்ளுங்கள்.)