சொந்த மண்ணில் மீள்குடியேற வேண்டும் எனும் மக்களின் இலட்சியக் கனவு நனவாகி
வருகின்றது
தமிழரின் சம்பூர் விடுவிப்பு:
மண் மீட்புப் போராட்டத்திற்கு
கிடைத்த மாபெரும் வெற்றி
புதிய அரசிற்கு சம்பந்தன் நன்றி: எவரும் எதிராக செயற்பட
வேண்டாமெனவும் கோரிக்கை
முதலீட்டு வலயத்துக்காக முன்னைய அரசால் சுவீகரிக்கப்பட்ட திருகோண மலை மாவட்டத்தின்
சம்பூர் பகுதியை தற்போதைய அரசு மக்களிடமே மீளக் கையளித்தமையை நாம் வரவேற்கின் றோம்.
இது தமிழ் மக்களின் மண் மீட்புப் போராட்டத்திற்குக் கிடைத்த முதலாவது மாபெரும்
வெற்றியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்
தெரிவித்துள்ளார்.தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த சொந்த மண்ணில் மீள் குடியேறி தொழில் செய்து
சுதந்திரமாக வாழவேண்டும் என்ற தமிழ் மக்களின் இலட்சியக் கனவு நனவாகி வருகின்றது
என்றும் அவர் குறிப்பிட்டார்.தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வேண்டும் என்பதில் உறுதியாக விடாப்பிடியாக இருந்து
வந்த சம்பூர் பகுதி மக்களின் இந்த விடாப்பிடி தற்போது புதிய அரசில் வெற்றியளித்
துள்ளது.
விவரம் |