புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
இவ்வாரம் உங்களுக்கு எப்படி?

மேடம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இந்த ராசி நேயர்களுக்கு வாரத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். நண்பர்கள் சிலரால் மனசு சோர்வடையும். குடும்பத்திலும் சற்று ஒற்றுமை குறையும். வாரத்தின் இறுதியில் சரியாகி விடும். தேவையில்லாத வாக்கு வாதம் தவிர்க்கவும்.

பெண்கள் - உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவனின் அன்பு சற்று குறையலாம். முக்கியமான முடிவுகளை இந்த வாரம் தவிர்க்கவும். பிறந்த வீட்டால் சில சிக்கல்கள் ஏற்பட்டு பின்பு மறையும் குடும்பத்திலும் சிறு குழப்பங்களை ஏற்படலாம்.

உத்தியோகம் - அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் இருந்த போதிலும் நண்பர்களிடயே, சக ஊழியர்களிடத்திலும் சற்று கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வழி உண்டு. வேலை அதிகமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் திருப்தியான வாரமிது

வியாபாரம் - சொந்த தொழில் (தனியார்) நன்றாக இருக்கும் கூட்டுத் தொழிலில் சற்று கருத்து வேறுபாடு வருவதற்கு வாய்ப்புண்டு. பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பங்கு வர்த்தகம் கை கொடுக்கும்.

குழந்தைகள் - உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. படிப்பில் ஆர்வம் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் வராமல் போகலாம்.

பரிகாரம் - ஞாயிறு, திங்கள் இரு நாட்களிலும் சிவ பூஜை செய்யவும் வெள்ளியன்று ராகு கால பூஜை துர்கைக்கு செய்துவர மனக்குழப்பங்கள் தீரும்.

இடபம் (கார்த்திகை 2ம், 3ம், 4ம், பாதம், ரோகிணி, - மிருகசீரிடம் 1ம், 2ம், பாதம்)

இதுவரை இருந்துவந்த கடன் தொல்லையில் இருந்து இந்த வாரம் சற்று விடுதலையடையலாம். குடும்பத்திலும் சந்தோஷம் நிலவும். கணவன் - மனைவி உறவு மற்றும் பெரியோர்கள் குழந்தைகளின் கல்வி சிறக்கும். மனதிற்கு நிம்மதி தரும் வாரம் என்று சொல்லலாம். சிலரது வருகையால் நன்மை பயக்கும்.

பெண்கள் - இந்த வாரம் பிறந்த வீட்டால் பயனுண்டு, கூடப்பிறந்தவர்கள் அனுசரினையாக இருப்பார்கள். எந்த வித மனக்கலக்கமும் இன்று சந்தோஷமான வாரமாக அமையும். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் புதுமனை மாற்றிசெல்லவும் கூடும்.

உத்தியோகம் - நமக்கு பலவிஷயங்களில் இந்த வாரம் லாபகரமாக அமையக்கூடும். சக தொழிலாளர்கள் மத்தியில் நல்ல பெயர்வாங்க ஏற்றவாரமாக அமையும். பணப்புழக்கம் குறையலாம். கேளிக்கைகள் நிறைந்த வாரம்.

வியாபாரம் - புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நல்ல நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும். அரசு உதவி நினைத்தபடி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் நிம்மதி கிடைக்கும் நீண்டநாளாக இருந்துவந்த பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும்.

குழந்தைகள் - படிப்பு சிறப்படையும். விளையாட்டுத்துறையில் முன்னேற வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

பரிகாரம் - புதன் கிழமை மற்றும் சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி அர்ச்சனை செய்யவும். 3 நபருக்கு இரு நாட்களிலும் அன்னதானம் செய்யவும்.

மிதுனம் (மிருகசீரிடம் 3ம், 4ம், பாதம், திருவாதிரை, புனர்பு+சம் 1ம், 2ம், 3ம், பாதம்)

இந்த இராசிகாரர்களுக்கு இந்த வாரம் வரவுக்கு மேல் செலவுகள் காத்திருக்கிறது. விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். சகோதர சகோதரியிடையே கொடுக்கல் வாங்கலில் சற்று மனவேற்றுமை வரும். நீண்ட நாட்களாக இருந்துவந் குடும்ப்பிரச்சினை ஒரு முடிவிற்கு வரும்.

பெண்கள் - வாரம் முழுவதும் வேலை பளு அதிகமாக இருக்கும். கணவர் குடும்பத்தில் மரியாதை கூடும். உங்கள் நண்பர்கள் உதவுவார்கள். குழந்தைகள் பெருமை சேர்க்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் சிலர் மேற்கொள்வார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

உத்தியோகம் - வெளிநாடு பயணம் சிறப்பாக இருக்கும் வேலையில் எண்ணிய எண்ணம் நிறைவேறும். வருமானம் கூடும். சிலருக்கு இடமாற்றம் உண்டு. இது நல்லது மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் சிலருக்கு வேலை மாற்றம் உண்டு.

வியாபாரம் - இந்த வாரம் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடல். நீண்ட காலமாக இருந்த வந்த கூட்டுத்தொழில் பிரச்சினை ஒரு வழியாக முடிவிற்கு வரும். சென்ற வார்த்தைவிட வருமானம் கூடும். பங்கு வர்த்தக சிறப்படையும்.

குழந்தைகள் - விளையாட்டுத் துறையில் புகழ் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம் - சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றவும். ஞாயிற்றுகிழமை சிவபிரானுக்கு மாலையில் 2 நெய் தீபம் ஏற்றவும்.

கடகம் (புனர்பு+சம் 4ம் பாதம், பு+சம், ஆயிலியம்)

சுப செலவுகள் காத்திருக்கிறது. திருமணம், நிச்சியதார்த்தம் வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலர் புதுமனை வாங்குவதோ, அல்லது இருக்கும் வீட்டை விட்டுவிட்டு வேறு வீடுமாறி செல்வதோ நடைபெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். சிலருக்கு பிரிந்தகுடும்பம் ஒன்றுசேரும். மனதில் திருப்தியும் சந்தோஷமும் தரும் வாரமாகவே அமையும்.

பெண்கள் - பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டில் சுபம் ஏற்படலாம். சகோதர, சகோதரிகளிடையே இருந்த மனக்கசப்பு விலகும். சிலர் நீண்டதூரம் பயணம் மேற்கொள்ளலாம். சிலர் யாத்திரை செல்வார்கள்.

உத்தியோகம் - வேலை பார்க்கும் இடத்தில் மேல் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு பிரயாணம் லாபகரமாக இருக்கும். அரசு உதவி எதிர்பார்த்தவர்களுக்கு தக்க உதவி கிடைக்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்த வங்கி உதவி கைக்கு வரும்.

வியாபாரம் - பங்கு வர்த்தகம் வார இறுதியில் நல்ல லாபம் வரும். புதிய வியாபாரம், கூட்டுத் தொழில் சிலருக்கு அமையும். வங்கி கடன் மற்றும் குடும்பத்திலிருந்து ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவு கிடைக்கும்.

குழந்தைகள் - படிப்பில் ஆர்வம் கூடும். அரசாங்க பதவி சிலருக்கு காத்திருக்கிறது.

பரிகாரம் - செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்கும் துர்கைக்கும் அர்ச்சனை செய்யவும். துவரம் பருப்பு தானம் செய்தால் நல்லது.

சிங்கம் (மகம், பு+ரம், உத்தரம் 1ம் பாதம்)

மனதில் கலக்கம், குழப்பம், பயம் ஏற்பட்டாலும் இறைவனின் கருணையால் இனிதே இருக்கும் இவ்வாரம். ஆஞ்சநேயரை மனதில் தியானம் செய்யுங்கள். 4ல் இருக்கும் சனி பகவான் சற்று நம்முடைய மரியாதை குறைவதற்கும், சமூகத்தில் அவமானம் ஏற்படவும் வழிசெய்வார். ஆனால் ஆஞ்சநேயரை தியானத் செய்து வாரம் முழுவதும் அன்னதானம் செய்யுங்கள், ஒருவருக்காவது.

பெண்கள் - கணவன், குழந்தை, குடும்பம், பெற்றோர்கள் இப்படி அனைவருக்கும் சற்று உங்களுக்கு எதிர்ப்பாக இருக்கலாம். ஆனால் இறைவன் உங்களை கைவிட மாட்டார். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுடைய வார்த்தை எடுபடாது. இருந்தபோதிலும் நண்பர்கள் உதவுவா¡ர்கள். மனதில் குழப்பம்ஏற்படலாம்.

உத்தியோகம் - வேலை இடத்தில், இடமாற்றம் ஏற்படும். இது உங்களது விருப்பத்திற்கு மாறாக இருக்கலாம். சிலருக்கு பணி நீக்கம் ஏற்படும். ஆனால் வேறு பணி கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. பொறுமை அவசியம் தேவை.

வியாபாரம் - புதிய ஒப்பந்தங்கள் இப்போது வேண்டாம் ஒரு சிலருக்கு கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். புதிய தொழிலோ, ஒப்பந்தங்களோ இப்போது கையெழுத்திட வேண்டாம். பண வரவு தாமதிக்கலாம். கோர்ட் விவகாரங்கள் தள்ளிபோகும்.

குழந்தைகள் - உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

பரிகாரம் - ஞாயிறு முதல் சனி வரை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்யவும். தினமும் குறைந்தது ஒரு நபருக்கேனும் அன்னதானம் செய்யவும்.

கன்னி (உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம்)

வாரம் முழுவதும், வேலை அதிகம் இருந்தாலும், குதுகலம் மிகுந்த வாரமாகவே அமையும். புதிய நட்பு, புதிய சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். எந்த வித மனக்கஷ்டமும் இல்லாத வாரமாக இந்த வாரம் அமையும். சிலர் தெய்வப் பணியில் ஈடுபடுவர். சமூக சேவையிலும் சில பணிபுரிவார்கள். மொத்தத்தில் இது ஒரு திருப்தி தரும் வாரமாக அமையும்.

பெண்கள் - கணவர், குடும்பம், அலுவலகம், தொழில் அனைத்திலும் திருப்தி இருக்கும், வாரம் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. சிலருக்கு புகுந்த வீட்டில் சுபநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பு ஏற்படும். உடல் நலம் தேறும்.

வியாபாரம் - தொழில் சிறப்படையும். எந்த ஒரு புது நட்பையும் நம்ப வேண்டாம். அது பிரச்சினைத் தரக்கூடியதாக இருக்கும். புதிய கடன் இப்போது வேண்டாம். அரசாங்க உதவி எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும் நண்பர்களின் வாக்குறுதி ஏமாற்றத்தை தரலாம்.

உத்தியோகம் - வேலை பலு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் வம்பு வேண்டாம். சிலருக்கு 5 இடமாற்றம் மன அமைதி கிடைக்கும். பழைய கடன் பாக்கி வசூலாகும். சம ஊழியர்களின் ஆதரவு வெற்றி தரும்.

குழந்தைகள் வெளிநாடு பிரயாணம் வெற்றிதரும் படிப்பில் கவனம் தேவை. விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

பரிகாரம் - பெருமாள் கோவிலுக்கு புதன்கிழமை செல்வவும்.

துலாம் (சித்திரை 3ம், 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1ம், 2ம், 3ம் பாதம்)

வெளியூர் பிரயாணம் வெளிநாடு செல்லும் யோகம் அனைத்துமே மனதிற்கு சுகம் தரும். சிலருக்கு தடைப்பட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். வேறு சிலருக்கு வீடு வாங்கும் யோகம் அமையும். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் பெருகும்.

பெண்கள் - வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்தில் அதிக பொறுப்பு ஏற்படும் சூழ்நிலை வரும். சில பெண்களுக்கு நட்புகாதலாக மாறும். கணவன், மனைவி உறவு சிறப்புடையும். கூட பிறந்த சகோதர, சகோதரிகளிடையே சிறு மனக்கசப்பு ஏற்படலாம். வார இறுதியில் சரியாகிவிடும்.

உத்தியோகம் - மனதிற்கு திருப்தியான வாரமாக அமையும். வேலையிடத்தில் உங்களது மரியாதை கூடும். இதுவரையிலிருந்த மனக்கசப்பு, மேலதிகாரிகளிடம், இனி அந்த நிலைமை மாறும். சிலருக்கு பணிமாற்றம் ஏற்படலாம்.

வியாபாரம் - கூட்டுத் தொழில் சிறப்படையும். எந்த ஒரு புது ஒப்பந்தங்களும் இப்போது வேண்டாம். வெளிநாட்டு வியாபாரம் சிறப்படையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் மூலமாக ஏற்பட்ட நட்பு உங்களுக்கு பெறும் உதவியாக இருக்கும். பங்கு வர்த்தகம் லாபம் உண்டு. தக்க சமயத்தில் கை கொடுக்கும்.

குழந்தைகள் - படிப்பு சுமாராக இருக்கும். நல்ல பெயர் வாங்குவீர்கள், விளையாட்டுத்துறையில் உற்சாகம்.

பரிகாரம் - வியாழகிழமை முருகப்பெருமானுக்கோ, அல்து குரு பகவானுக்கு விரதமிருந்து அர்ச்சனை செய்யவும் பால் அபிஷேகம் நல்லது.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுசம், கேட்டை)

இந்த ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் விருந்தாளிகளை வரவேற்பதும், கேளிகைகள் நிறைந்ததுமான வாரமாகும். ஒரு சிலர் யாத்திரை செல்ல நேரிடும். கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தெய்வப் பணியில் ஈடுபாடு அதிகமாகும். எந்த ஒரு செயலிலும், கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் ஏற்பாடு ஆகும்.

பெண்கள் - பிறந்த வீட்டால் நன்மை ஏற்படும். புகுந்த வீட்டால் சில மனக்கஷ்டங்கள், வாக்கு வாதம் வருவதற்கு வழியுண்டு. புதிய வீடு கட்டுவதோ, வாங்குவதோ இப்போது வேண்டாம். புதிய முயற்சிகளை தற்காலிகமாக தள்ளி போடவும். கூட பிறந்தவர்கள் பெரிய உதவி செய்வார்கள். மனதில் இருக்கும் பாரம் குறையும்.

உத்தியோகம் - அலுவலகத்தில் வாக்குவாதம் வேண்டாம். தேவையில்லாத மனக்கஷ்டம் இதனால் ஏற்படலாம். உங்களது சக ஊழியர்களிடமும், மேல் அதிகாரிகளிடமும் இனிமையாக பேசுங்கள். வேலை தேடிக்கொண்டிருப்போருக்கு இன்னும் சில காலம் பொறுக்க வேண்டும்.

வியாபாரம் - சில காரணங்களால் உங்களது எண்ணம் நிறைவேறாமல் போகலாம். வாரத்தின் இறுதியில் முயற்சி செய்யுங்கள் வெற்றி கிடைக்கும். பொதுவாக வருமானம் இந்த வாரம் சற்று மந்தமாக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். எந்த செயலும் சற்று யோசித்து செயல்படவும்.

குழந்தைகள் - படிப்பில் ஆர்வம் கூடும். விளையாட்டுத் துறையில் முன்னேற வாய்ப்பு கிட்டும்.

பரிகாரம் - செவ்வாய்கிழமை முருகனுக்கு அர்ச்சினை செய்யுங்கள். விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவிக்கவும்.

தனுசு (மூலம், பு+ராடம், உத்தராடம் 1ம் பாதம்)

சென்ற வாரத்தை விட இந்த வாரம் சிறப்பாக அமையும். எந்தவிதமான மன சஞ்சலங்களும் இல்லாமல் சந்தோஷத்துடன் இருப்பீர்கள். உங்களது குழந்தைகளால் பெருமை சேரும். வீட்டில் திருமணமோ, வளைகாப்போ, கிருகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். இதுவரை மனதில் இருந்த கலக்கம், மனசஞ்சலம் யாவும் தீரும். சிலர் புதிதாக தொழில் தொடங்குவதோ, அல்லது விரிவாக்கம் செய்யவோ கூடும்.

பெண்கள் - வீட்டில் பெரியவர்களின் ஆதரவும், அரவணைப்பும் கிடைக்கும். சில பெண்கள் தெய்வப்பணியில் ஈடுபடுவர். கோயில் விஷேசங்கள் மற்றும் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்கவும் செய்வர். சிலருக்கு நீண்ட நாள் நட்பு காதலாக மாறும். குடும்பத்திலும் அதை ஏற்கும் சூழ்நிலை உருவாகும்.

உத்தியோகம் - வேலையிடத்தில் சிரமம் இல்லை. இருந்த போதிலும் சிறுசிறு இடஞ்சல்கள் வருவதிற்கு வாய்ப்புண்டு. சமூகத்தில் உங்களது மரியாதை உயரும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும்.

வியாபாரம் - கூட்டுத் தொழிலில் சிறிது எச்சரிக்கை தேவை. புதிதாக தொழில் தொடங்குவது இப்போது வேண்டாம். விரிவாக்கம் செய்யும் எண்ணம் இருந்தால் தள்ளிபோடவும்.

குழந்தைகள் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், விளையாடுத்துறையில் மேன்மை அடைவார்கள், இதனால் குடும்பத்தில் பெருமை சேரும்.

பரிகாரம் - வியாழன் அன்று தட்சணாமூர்த்திகோ, அல்லது குரு பகவானுக்கோ விரதம் இருக்குங்கள். 3 நெய் தீபம் ஏற்றவும்.

மகரம் (உத்தராடம் 2ம், 3ம், 4ம், பாதம், திருவோணம், அவிட்டம் 1ம், 2ம் பாதம்)

இந்த ராசி நேயர்களுக்கு, கலக்கமும், சந்தோஷம் கலந்த வாரமாக அமைகிறது. வாரத்தின் முற்பகுதியில் வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி சற்று சலசலப்பு வந்து ஓயும். எந்த காரியத்திலும் கவனம் தேவை. நண்பர்களிடத்தில் வாக்கு வாதம் வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை வர வாய்ப்புண்டு. பொறுமை அவசியம் வாரத்தின் ஆரம்பத்தில். பிற்பாதியில் நன்றாக இருக்கும்.

பெண்கள் - உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் வரலாம். கண்கள் சம்மந்தப்பட்ட நோய் சிலருக்கு பாதிப்பை உண்டு பண்ணும். எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. கணவன் மனைவி உறவில் சலசலப்பு வரலாம். பெரியவர்கள் உங்கள் மீது பழிசொல்ல நேரிடும். காதலர்களிடையே கருத்து வேறுபாடு வரலாம். இதன் விளைவாக நட்பு முறிய வாய்ப்புண்டு.

உத்தியோகம் - வரவு சீராக இருக்கும். ஒரு சிலருக்கு பணிமாற்றம் ஏற்படலாம். உங்களது விருப்பத்திற்கு மாறாக இருக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும். அரசு பணியில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

வியாபாரம் - கூட்டுத்தொழிலில் சில சிக்கல் ஏற்படலாம். கடன் தொல்லை தீரும், நண்பர்கள் உதவுவார்கள். புது வியாபாரம், தொழில் விரிவாக்கம் இப்பொழுது வேண்டாம்.

குழந்தைகள் - வாரம் முழுவதும் சந்தோஷம் கொண்டாட்டம் தான்.

பரிகாரம் - வாரத்தில் இரு நாட்கள் அன்னதானம் செய்யுங்கள். வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்யுங்கள்.

கும்பம் (அவிட்டம் 3ம், 4ம் பாதம், சதயம், பு+ரட்டாதி 1ம், 2ம், 3ம் பாதம்)

குடும்ப ஒற்றுமை ஓங்கும். மனதில் அமைதி தரும் வாரமாக அமைகிறது. பெண்களுக்கு குறிப்பாக வெற்றி தரும் வாரமாக அமையும். எந்த ஒரு கவலையும் இன்றி சந்தோஷம் தரும் வாரமாக இந்த வாரம் அமையப் போகிறது. தொழில், வியாபாரம் சிறப்படையும். பொதுவாக இந்த வாரம் எந்த குறையும் இல்லாத சிறப்பான வாரம் கும்பராசி நேயர்களுக்கு.

பெண்கள் - அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இந்த வாரம் வெள்ளிகிழமை அன்று விரதமிருந்து, துர்க்கை வணங்கினால் நல்லது. குடும்ப ஒற்றுமை, கணவன் - மனைவி உறவு மற்றும் குழந்தைகள் சிறப்படையும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் திங்கட்கிழமை சிவனுக்கு விரதம் இருந்து அர்ச்சனை செய்யவும். பூரட்டாதி நட்சத்திர பெண்கள் ஞாயிறு ராகு காலத்தில் துர்க்கையை வணங்கவும்.

உத்தியோகம் - வேலை பலு குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய உத்தியோகம் நல்லபெயர் வாங்கி தரும், நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள் வருமானம் கூடும். ஒரு சிலர் வெளியூர் பிரயாணம் மேற்கொள்வர். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.

வியாபாரம் - வருமானம் கூடும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பொன் பொருள் சேரும் தொழில் விரிவாக்கம் செய்யலாம். அரசாங்க உதவி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகிட்டும்.

குழந்தைகள் - படிப்பு நன்றாக இருக்கும்.

பரிகாரம் - வாரத்தில் ஒரு நாள் விநாயகருக்கு சிவனுக்கு 2 நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்யவும்.

மீனம் (பு+ரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் முழுவதுதே சுறுசுறுப்புடன் இருப்பீர்கள் பிளவுபட்ட குடும்பம் ஒன்று சேரும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். செவ்வாய் கிழமைக்கு மேல் அயல்நாட்டு செய்தி நன்மை தரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம். மனதில் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் உதவுவார்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன் கிழமை விரதமிருந்து கிருஷ்ணரை வழிபடுங்கள் துளசி அர்ச்சினை செய்யும்.

பெண்கள் - நல்ல முன்னேற்றமான வாரம். கணவன் அன்பு கூடும். இந்த வாரத்தில் பிறந்தநாள் காணும் பெண்கள் அன்று துர்க்கையை வழிபடுவது நல்லது உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வியாபாரம் - புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கடன் தொல்லை தீரும். அயல் நாட்டு வியாபாரம் வருமானம் பெருகும். வரவு அதிகரிக்கும். புதியதொழில் முயற்சியை தள்ளிபோடவும்.

உத்தியோகம் - அலுவலகத்தில் உங்களது மரியாதை கூடும். பணி மாற்றம் கிடையாது. சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். இவர்களால் ஆதாயம் உண்டு.

குழந்தைகள் - படிப்பில் கவனம் கூடும். விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரம் இது.

பரிகாரம் - குடும்ப தெய்வதற்கு (இஷ்ட தெய்வம்) பூஜை செய்யவும். 3 நபருக்கு வியாழனன்று அன்னதானம் செய்யவும்.

உங்கள் கேள்விகளைக் கீழ்வரும் முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்.
ஜோதிட பலன்
தினகரன் வாரமஞ்சரி
லேக் ஹவுஸ், கொழும்பு - 10
மின்னஞ்சல் - [email protected]

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.