மொபிடெல் பிரைவட் லிமிட்டெட் மூலமாக கையகப்படுத்தல் பற்றிய யூகம் ஒன்று அண்மை யில்
அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பிரசுரமாகியிருந்தமை தொடர்பிலும் குறித்த
கொடுக்கல் வாங்கல்களுக்காக மதிப்பிடப்பட்ட தொகையைவிட பெருமளவு அதிக தொகையை செலுத்தி
குறித்த கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மொபிடெல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும்
வெளியான செய்திகளை மொபிடெல் முழுமையாக நிராகரித்துள்ளது.
உள்நாட்டு சேவை வழங்குநர் ஒருவரை கையகப்படுத்த தாம் தீர்மானித்துள்ளதாகவும், அதன்
மூலமாக தமது சந்தை நிலை மற்றும் சொத்துக்கட்டமைப்பு ஆகியவற்றை கொள்கை முதலீட்டுத்
திட்டத்துக்கமைய மேம் படுத்திக்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் மொபிடெல் பிரைவட்
லிமிட்டெட் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த கொடுக்கல் வாங்கலை பூர்த்தி செய்வதற்கு அவசியமான முழுமையான
செயன்முறைகளை மொபிடெல் பின்பற்றி வருவதாகவும், இது தொடர்பில் எதுவித இறுதித்
தீர்மானங்களும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லையெனவும் மொபிடெல் அறிவித்துள்ளது.