இலங்கையின் இனவாத, மதவாத ரீதியாக செயற்பட்டுவரும் அமைப்புகளை உடனடியாக தடை செய்ய
வேண்டும் என மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் நேற்று
பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வாறான அமைப்புகளை தடை செய்யாவிட்டால் பல
பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் போய்விடும் என்றும் அவர் தெரிவித்தார். வரவு
செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.