தினகரன் வாரமஞ்சரியின் பன்னிரண்டாவது வாசகர் வட்டம் பதுளை மாநகரில் எதிர்வரும்
டிசம்பர் 20ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. இவ்வட்டத்திற்கான
அங்குரார்ப்பண விழாவிற்கான ஏற்பாடுகளை பதுளை யுனிமீடியா அமைப்பினர் கல்விச்
சமூகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விழாவில், சிரேஷ்ட கலைஞர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள்
கெளரவிக்கப்படவுள்ளனர்.
அங்குரார்ப்பண விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் முதலானோர்
அழைக்கப்படுகின்றனர். விழா தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு ‘யுனிமீடியா’ செயலாளரின்
0773252218 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.