நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த பொலிஸாருக்கு பக்கபலமாக படையினர்
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த
பொலிஸாருக்கு பக்கபலமாக படையினர்
பொய்யுரைகளை நம்ப வேண்டாம்; பாதுகாப்பு அமைச்சு தகவல்
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற எந்தவொரு தருணத்திலும் சட்டம்
மற்றும் ஒழுங்கை பாதுகாப் பதற்காக இலங்கை பொலிஸ¤க்கு ஒத்துழைப்பு நல்குவதற்கு
தயாராக இருக்குமாறு முப்படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று
பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவுகின்ற சமாதா னமான சூழ்நிலையில் சீர் குலைக்கப்படும் எந்தவொரு
தருணத்திலும் நாட்டில் அமுலில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக பேணுவதற்காக
ஸ்ரீலங்கா பொலிஸின் கோரிக் கைக்கு அமைவாக தேவையான ஒத்துழைப்பை நல்குவதற்கு
முப்படையினரும் தங்களுடைய முகாம்களின் சுற்றுச்சூழலில் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்பை குறை மதிப்பீட்டிற்குட்படுத்தி பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்களை
நம்பி ஏமாற வேண்டாம் என்று பொது மக்களிடம் பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள்
விடுத்துள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும்
இடமளிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு
வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அமைதியான சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்
சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க முப்படையினரும் தயாராக இருப்பதாக அந்த அமைச்சு
தெரிவித்துள்ளது.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு உதவி தேவை என்று காவல்துறை கோரினால் உதவி
வழங்குவதற்கு முப்படையினரும் தயார் என்று பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.