இலங்கை தொடர்பான அறிக்கை ஐ. நா. செயலாளரிடம் கையளிப்பு
இலங்கை தொடர்பான அறிக்கை ஐ. நா. செயலாளரிடம் கையளிப்பு
மகேஸ்வரன் பிரசாத்
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண உள்ளிட்ட
குழுவினர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனிடம் இலங்கை தொடர்பான அறிக்கை யொன்றை
சமர்ப்பித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான ஜப்பானின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சனியோ நிஷிடா
தலைமையிலான நான்கு நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம்
மேற்கொண்டிருந்தனர்.
இக்குழுவினர் தமது விஜயம் தொடர்பில் நேரில் கண்ட விடயங்கள் குறித்து அறிக்கையொன்றை
ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்திருப்பதாக வெளிவி வகார அமைச்சின் செயலாளர்
குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக் கப்படும் அபிவிருத்தி
நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக
தெரியவருகிறது.