இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் பெட்ரோல், டீசலின் விலையை நேற்று நள்ளிரவு
முதல் அதிகரித்துள்ளது.
அதன்படி 90 ஒக்டெயின் பெட்ரோல், ஒரு லீட்டர் 3 ரூபாவால் அதிகரிக்கப் பட்டுள்ளது.
அதன் புதிய விலை 162 ரூபாவாகும். 95 ஒக்டெயின் பெட்ரோல் ஒரு லீட்டர் 3 ரூபாவால்
அதிகரிக்கப் பட்டுள்ளது. அதன் புதிய விலை 170 ரூபாவாகும். ஆட்டோ டீசல் ஒரு லீட்டர்
6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 121 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 145
ரூபாவாகும் மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 111 ரூபாவில் இருந்து 115 ரூபாவாக
அதிகரிக்கப்பட்டுள்ளது.