அம்பாறை மாவட்டத்தில் நேற்று (16) சீரான காலநிலை அறுவடைகள் இயந்தி ரங்களின்
துணையுடன் ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாக இருந்தது.
கடந்த ஒரு வாரகாலமாக இடைவிடாது இரவு பகல் என தொடர்ந்து பெய்த கன மழையினால் பாரிய
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நெல்வேளான்மைகள் மிக சோமான அழிவுகளை சந்தித்துள்ளன. இப்
பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நெல் உட்பபட ஏனைய சிறு தானியங்களான பயிறு, உழுந்து,
குரக்கன், கெளபீ, மற் றும் இறுங்கு போன்ற பயிர்கள் மீள அறுவடை செய்ய முடியாத
அழிவுகளையும் கண்டுள்ளன.
நேற்று முன்தினமான காலநிலை ஓரளவு சீரானது. சீரான காலநிலை
ஏற்பட்டு நெற்கதிர்களில் ஈரப்பதன் குறைவடைந்ததை தொடர்ந்து அறுவடை களை விவசாயிகள்
மேற் கொள்கின்றனர். ஆனால் நெல் விளைச்சல் 75 வீதமாக குறைவடைந்துள்ளது. இது
விவசாயிகளை பாரிய கவலைக்கு உட் படுத்தியுள்ளதுடன் விவசாயத் துறைக்குப் பெற்றுக்
கொண்ட கடன் மீள செலுத்த முடியாத நிலையிலும் விவசாயிகள் உள்ளனர்.