சம்மாந்துறை அன்வர் மஸ்ஜிதுக்கு முன்னால் உள்ள வளைவில் கனரக வாகனம் ஒன்று மோதியதில்
சம்மாந்து றையைச் சேர்ந்த முகம்மட் அலி (70) ஸ்தலத்தில் மரணமான சம்பவமொன்று நேற்று
(16) இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறையிலிருந்து மண் ஏற்றிக் கொண்டு சென்ற கனரக வாகனம் துவிச்சக்கர வண்டியில்
மோதிய போதே இம்மரணம் ஏற்பட்டுள்ளது. மரணமா னவரின் சடலம் சம்மாந்துறை வைத்தி
யசாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.