கே: எழுத்தாளராவதற்கு என்ன தகுதியிருந்தால் போதுமென்று நீங்கள் நினைக்கிaர்கள்?
ப: இலக்கியம் பிடித்திருக்க வேண்டும். மனிதர்களைப் படித்திருக்க வேண்டும். அத்தோடு
தேடலும். நம்பிக்கையும் இருக்க வேண்டும்.
கே: ஏ. பெண்ணே
அடிக்கடி சிரிக்காதே
ஏற்கனவே இங்கு
தாடியுடன் பலபேர்
இதற்கு பதில் கவிதை எழுதுங்கள் பார்ப்போம்?
ப: ஏ ஆணே!
சும்மா சும்மா உளறாதே
எங்கள் கழுத்தில்
தாலி பார்!!
(ஓ... அதனால் தானோ அவன் தினமும் தேடுகிறான். பார் (கிar)
கே: பள்ளி நாட்களில் யாருக்காவது அல்வா கொடுத்த அனுபவம் உண்டா?
ப: அல்வாவுடன் கேக்கும் கொடுத்திருக்கிறேன். என் பிறந்த நாட்களில் ஹா.. ஹா....!
(ஓ.... ஒன்னு கொடுத்தா... ஒன்னு ப்ரியா...?)
கே: நீங்கள் சிரித்தால் பூக்கள் விரியுமா? பூகம்பம் வெடிக்குமா?
ப: நான் சிரிச்சால் பூ விரியும் முறைச்சால் பூகம்பம் வெடிக்கும்ல...
(இது கொஞ்சம் ஓவராத் தெரியல்ல...?)
கே: தமிழ் அரிச்சுவடியிலுள்ள எழுத்துகளில் ஆபத்தான எழுத்து எது?
ப: தீ சுட்டுப்புடுமுங்க.
(இல்லிங்க.. தீயைக் கொண்டு திருக்குறளும் படிக்கலாமுங்கோ...
கே: குத்து விளக்குக்கும், குடும்ப விளக்குக்கும் என்ன வித்தியாசம்?
ப: குத்துவிளக்கு எண்ணெய் ஊற்றினால்தான் எரியும். குடும்ப விளக்கு எண்ணெய்
ஊற்றாமலேயே எரியுமுங்கோ..
(அடாடா அனுபவம் பேசுதுங்கோ...!)
கே: பர்தா போட்ட பரீதாவுக்கும் சுடிதார் போட்ட சுகுனாவுக்கும் என்ன வித்தியாசம்?
ப: சட்டுன்னு சொல்றேன் பொட்டுதான் வித்தியாசம்.
(பட்டுன்னு இப்படி சொன்னா.. பொட்டுன்னு நான் போயிடுவேனுங்கோ?)
கே: உங்களைப் பார்த்து பொறாமைப்பட்ட எழுத்தாளர்கள் யாராவது உண்டா?
ப: வார்த்தையால் கத்தி செய்து வீசியவர்களும் இருக்கிறார்கள். வாழ்த்துக்களால்
பூக்களைத் தூவியவர்களும் இருக்கிறார்கள். நாம் கண்டுக்காம போய்க்கிட்டே இருக்க
வேண்டியதுதான்.
(ஓ.. அப்படீன்னா றப்பர் மரத்திற்கு ரணங்களைப் பற்றி கவலை இல்லைன்னு சொல்லுங்கோ..?)
கே: உங்களை யாராவது அடித்துவிட்டால் Why this Kolavery? Why
this Kolavery?
என்றவாறு வீட்டைச் சுற்றி ஓடுவீர்கள் என்று உங்கள் தோழி சொல்கிறாரே உண்மையா?