அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் பிரிமியர் சுப்பர் லீக் போட்டிகளில்
விளையாட குமார் சங்கக்காரவும். மஹேல ஜயவர்தனவும் ஒப்பந்தமாகியுள்ளனர். 2017ம் ஆண்டு
பெப்ரவரியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் பிரிமியர்
சுப்பர் லீக் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் நாட்டின் ஐந்து நகரங்களின் பெயர்களில்
அணிகள் மோதவுள்ளன.
இதில் அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற
நாடுகளின் பிரபல்ய வீரர்கள் விளையாடவுள்ளனர். இலங்கையின் முன்னாள் வீரர்களான குமார்
சங்கக்காரவும், மஹேல ஜெயவர்தனவும் கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.