சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ஆயர் இராயப்பு
ஜோசப் ஆண்டகை சுமார் மூன்று மாத காலத்திற்குப் பின்னர் கடந்த செவ்வாயன்று மீண்டும்
இலங்கை திரும்பி, தற்போது மன்னார் ஆயர் இல்லத்தில் தனது கடமைகளைச் சிறிது சிறிதாக
ஆரம்பித்து வருகிறார். இவரைப் பெருமளவிலான மக்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் கொழும்பு சென்றுகொண்டிருந்தபோது, நோயினால் பாதிக்கப்பட்ட ஆயர்
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.