புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
வழமை நிலைக்கு திரும்பும் மன்னார் ஆயர் ஜோசப்பு

வழமை நிலைக்கு திரும்பும் மன்னார் ஆயர் ஜோசப்பு

 சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை சுமார் மூன்று மாத காலத்திற்குப் பின்னர் கடந்த செவ்வாயன்று மீண்டும் இலங்கை திரும்பி, தற்போது மன்னார் ஆயர் இல்லத்தில் தனது கடமைகளைச் சிறிது சிறிதாக ஆரம்பித்து வருகிறார். இவரைப் பெருமளவிலான மக்கள் நலம் விசாரித்து வருகின்றனர். 

கடந்த மே மாதம் கொழும்பு சென்றுகொண்டிருந்தபோது, நோயினால் பாதிக்கப்பட்ட ஆயர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.