புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
எந்தவிதமான நஷ்ட ஈடும் வேண்டாம் பிள்ளைகள் வந்தால் மட்டும் போதும்

எந்தவிதமான நஷ்ட ஈடும் வேண்டாம் பிள்ளைகள் வந்தால் மட்டும் போதும்

ஆணைக்குழு முன்னால் தாயொருவர் கண்ணீர் மல்க சாட்சியம்

எமக்கு எந்தவிதமான நஷ்ட ஈடுகளும் வேண்டாம். எமக்குப் பிள்ளைகள் வந்தால் மட்டும் போதும். கடவுளை நம்பிக்கொண்டு இரு மகன்களும் வருவர் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன். இராணுவத்தினர் எனது இரு மகன்களையும் பிடித்துச் சென்று இன்று வரை தகவல் எதுவும் தெரியாதுஇருக்கின்றேன் என யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழு முன்னால் தாயொருவர் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூத்த மகனான கருப்பன் பாலகிருஷ்ணன் என்பவரை மணியந்தோட்டத்தில் வைத்து இராணுவம் பிடித்துச் சென்றது. இதனை இவரின் சித்தப்பா நேரில் கண்டுள்ளார். அவர் சாட்சியமளிக்க எங்கும் போகத் தயார் என்றும் கூறியிருக்கிறார்.

அதேபோல் 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடற்தொழிலில் ஈடுபட்டு, வீடு திரும்பும் வழியில் எனது இளைய மகன் கருப்பன் சுரேஸ் கொழும்புத்துறையில் வைத்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டதாகவும் குறித்த பகுதியால் சென்றவர்கள் நேரில் பார்த்ததாக எனக்கு தெரிவித்தனர். இரு மகன்களையும் இராணுவ முகாம்கள் எல்லாம் தேடி அலைந்தோம். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை. இன்று வரை அவர்கள் பற்றி எதுவும் எமக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளார். 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.