தனி ஒரு நபரின் தற்புகழ்ச்சிக்கென லேக்ஹவுஸ் நிறுவனம் 800 மில்லியன் ரூபாவை
இழந்திருக்கிறது என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க நேற்று பாராளுமன்றத்தில்
தெரிவித்தார். 2001 - 2004 காலப் பகுதியில் எமது அரசு லேக்ஹவுஸ் நிறுவனத்தை
ஒப்படைக்கும் போது 289 மில்லியன் ரூபாவுடனேயே
தனிநபர்...
ஒப்படைத்தது. ஆனால் ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் நாம் லேக்ஹவுஸ் நிறுவனத்தை
பொறுப்பேற்கும் போது வங்கி கடன் நிலுவைகளுடன் 800 மில்லியன் ரூபா நஷ்டத்தில்
இயங்கும் நிறுவனமாகவே கிடைத்தது.
தனி ஒரு நபரின் தற்புகழ்ச்சிக்காக இவை செலவிடப்பட்டுள்ளன என்று கூறிய அமைச்சர்
கயந்த கருணாதிலக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரிய அளவிலான
புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட பல புத்தகங்களை காண்பித்தார்.
அத்துடன் தினமின சிங்கள மொழி பத்திரிகையின் முதல் பக்கத்தில் அரைவாசிக்கு மேல்
பெரிய அளவு பிரசுரிக்கப்பட்டிருந்த படங்களையும் காண்பித்தார்.
தொடர்ந்தும் பேசிய அமைச்சர் கயந்த கருணாதிலக்க,
இவ்வாறு நட்டத்தில் இயங்கிய லேக்ஹவுஸ் நிறுவனத்தை இன்று அதன் தலைவர் மற்றும்
பணிப்பாளர் சபையின் பெரு முயற்சியின் காரணமாக 800 மில்லியன் ரூபாவை 450 மில்லியன்
ரூபாவாக குறைக்க முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு
பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.