புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
தீபாவளி முற்பணமாக 6,500 வழங்க கோரிக்கை

தீபாவளி முற்பணமாக 6,500 வழங்க கோரிக்கை

தொழிலாளர் தேசிய சங்கம் வேண்டுகோள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற தீபாவளி பண்டிகை முற்பணத்தினை 6500 ரூபாவாக அதிகரிக்குமாறு தொழிலாளர் தேசிய சங்கம் பெருந்தோட்டக் கம்பனி களிடமும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலுறவு மற்றும் நிருவாகத் திற்கான சிரேஷ்ட ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங் பொன்னையா, 22 பெருந்தோட்டக் கம் பனிகளுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்குத் தற்போது 4500 ரூபா மாத்திரம் தீபாவளி பண்டிகை முற்பணமாக வழங்கப்படுகின்றது. எனினும் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியில் இந்தத் தொகை எவ்விதத்திலும் போதுமானதாக வில்லை. எனவே இந்தத் தீபாவளி பண்டிகை முற்பணத்தினை 6500 ரூபாவாக அதிகரிககும் பட்சத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் நன்மையடைவர்.

எனவே இவ்வருடம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடவுள்ள தோட்டத் தொழிலாளர்களின் நன்மைக்கருதி 6500 ரூபாவை தீபாவளி பண்டிகை முற்பணமாக வழங்குவதற்கு தோட்டக் கம்பனிகளும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் முன்வரவேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.