அட்டன் சமூக நல அபிவிருத்தி
மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு கடந்த சனிக்கிழமை அட்டன்
இந்து மகா சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள்
நடைபெற்றது. சிறுவர்களின் திறமைகளை கண்ட பெற்றோர் தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
பெருந்தோட்ட பிள்ளைகள் கல்வியை கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு வேலைத்தேடிச் செல்வதால்
ஏற்படும் விபரீதங்களை சித்தரிக்கும் வகையில் இங்கு மேடையேற்றப்பட்ட நாடகம்
அனைவரையும் சிந்திக்க வைப்பதாக அமைந்திருந்தது. போட்டிகளில் பங்குபற்றிய மற்றும்
வெற்றி பெற்ற சிறுவர்களுக்கான பரிசில்களும் இங்கு வழங்கப்பட்டன. இந் நிகழ்வில்
பங்குபற்றிய சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் பெருந்தோட்ட பகுதியை சேர்ந்தவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.