பொலிவுட்டின் முன்னணி நடிகைகளான பிரியங்கா, கத்தரினாவுக்கு இடையே திடீரென மோதல்
ஏற்பட்டுள்ளது.
அலி அப்பாஸ் ஜhபர் இயக்கும் இந்திப்படம் குண்டே. அர்ஜ{ன் கபு+ர், ரன்வீர் சிங்
கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
இதில் கதாநாயகியாக நடிப்பது யார் என்பதில் போட்டி ஏற்பட்டது. முதலில் இக்கதையை
கத்ரினாவிடம் இயக்குநர் சொன்னார்.
கதை கேட்டு பிடித்துவிடவே கால்'Pட் பற்றி பிறகு பேசலாம் என்று கத்தரினா
கூறியிருந்தார். குறிப்பிட்ட மாதங்களில் கால்'Pட் வேண்டும் என்று இயக்குநர் கேட்டார்.
ஆனால், அப்போது ஹிருத்திக் ரோ'ன் படத்திற்காக கால'Pட் ஒதுக்கித் தந்திருப்பதாக
கத்தரினா கூறவே, மவுனமாக திரும்பிய அலி அப்பாஸ் நேராக பிரியங்கா சோப்ராவிடம் சென்று
கதை கூறினார்.
அவருக்கு கதை பிடித்துவிடவே உடனடியாக கால்'Pட் ஒதுக்கிக் கொடுத்தார். அத்துடன்,
இப்படத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் இயக்குநர் கேட்டிருந்தார். ஆனால் கால்'Pட்
பிரச்சினை இருந்ததால் உடனடியாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. தற்போது அதை சரி
செய்துவிட்டேன் என்று கூறினார் பிரியங்கா.
இதைக்கேட்டு கோபம் அடைந்த கத்தரினா, குண்டே படத்தில் நடிக்க முதலில் என்னிடம் தான்
இயக்குனர் கால்'Pட் கேட்டார். என்னால் கால்'Pட் ஒதுக்கி தர முடியாததால் அதில்
நடிக்கவில்லை.
ஆனால் தன்னிடம்தான் முதலில் கதையை சொன்னதுபோல் வேறு கதாநாயகி (பிரியங்கா) சொல்கிறார்.
அதை ஏற்க முடியாது என பதிலடி தந்துள்ளார்.
யாரிடம் கதை முதலில் சொல்லப்பட்டது என்பதில் பிரியங்கா, கேத்ரினாவுக்கு இடையே மோதல்
ஏற்பட்டுள்ளமை பொலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.