எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது 2010
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது
2010
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற
ஈழத்து தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் தமிழியல் வித்தகர் பட்டமும்
தமிழியல் விருதும் பொற்கிழியும் வழங்கிக் கெளரவித்து வருகின்றது. இவ்வாண்டும் ஜம்பசி
மாதத்தில் இவ் விருதுகளை வழங்குவதற்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் செயல்வடிவம்
கொண்டுள்ளது.
உயர் தமிழியல் விருது
இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி ஒருவருக்கு
எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ. கே. பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது
வழங்கிக் கெளரவிக்கும்.
2009 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த 3 குறுந்திரைப்படங்களுக்கு தலா ரூபா 10,000
பொற்கிழியுடன் டாக்டர் பூபாலரட்ணம் தமிழியல் விருது
கவிஞர் கல்லாறன் தமிழியல் விருது
துறையூர் வே. நாகேந்திரன் தமிழியல் விருதும் வழங்கிக் கெளரவிக்கும்.
சிறப்புத் தமிழியல் விருது
மிகச் சிறந்த வெளியீட்டகம்/ பதிப்பகம், நூல்வடிவமைப்பு/ அட்டை வடிவமைப்புக்கு தலா
ரூபா 5,000 பொற்கிழியுடன்
புரவலர் ந. ஜெகதீசன் தமிழியல் விருது
புரவலர் எஸ். சோலைமலைத்தேவர் தமிழியல் விருதும் வழங்கிக் கெளரவிக்கும்.
ஓவியருக்கான தமிழியல் விருது
மிகச் சிறந்த ஓவியர் ஒருவருக்குத் தலா ருபா 5,000 பொற்கிழியுடன் ஓவியர் கிக்கோ
தமிழியல் விருது வழங்கிக் கெளவிக்கும்.
அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு தமிழியல் விருதுக்கான நூல்களையும் குறுந்
திரைப்படங்களையும் தேர்வு செய்ய படைப்பாளிகளிடமிருந்து நூல்களையும்
இறுவட்டுக்களையும் எதிர்பார்கிறது.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற இலங்கையைத் தாயகமாகக் கொண்ட படைப்பாளிகள்
2009 ஆம் ஆண்டு தை 1ஆம் திகதி முதல் மார்கழி 31ஆம் திகதி வரை வெளிவந்த நூல்களையும்
குறுந்திரைப்பட இறுவட்டுக்களையும் தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம்.
நாவல் சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம், விடலை இலக்கியம்
நாடகம், அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இன மத
நல்லுறவு இலக்கியம், தொழில்நுட்பம் எனப் பல்துறை சார்ந்த நூல்களையும், 30
நிமிடங்களுக்கு உட்பட்ட பல்துறை சார்ந்த குறுந்திரைப்பட இறுவட்டுக்களையும்
தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம்.
தேர்வுக்காக வந்து சேரும் நூல்களில் இருந்து 2009 இல் வெளிவந்த சிறந்த 13 நூல்களும்,
இறுவட்டுகளில் இருந்து 3 சிறந்த குறுந் திரைப்படங்களும் நீதியானதும்
சுதந்திரமானதுமான துறைசார் நடுவர் குழுவினால் தமிழியல் விருது 2010க்காக தேர்வு
செய்யப்படும்.
தேர்வுக்காக பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் உள்ளடங்கலாக சுயமாகத் தயாரிக்கப்பட்ட
விபரப் பட்டியலுடன் நூலாயின் 4 பிரதிகளும் இறுவட்டாயின் 2 பிரதிகளும் 10-8-2010க்கு
முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.
ஒரு படைப்பாளி எத்தனை வகையான படைப்புகளையும் அனுப்பி வைக்கலாம்.