கண்டி - தெல்தெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(21) மாலை தீ விபத்து
ஏற்பட்டுள்ளது.
இதனால், மஹியங்கனை கண்டி பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
தீயை அனணப்பதற்காக சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு
வீரர்கள் விரைந்து சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகப் பொலிஸார்
தெரிவித்தனர். தீவிபத்திற்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.