வடமாகாண முதலீட்டாளர்கள் மாநாடு நாளை:
புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு
யுத்ததால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தினைக் மேம்படுத்தல், அவர்களது வருமான மூலத்தினை அதிகரிப்பதற்கான ஆதரவினை வழங்கல், வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்பல், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தல் என்பனவற்றினை நோக்காகக் கொண்டு, வடமாகாண முதலீட்டாளர்கள் மாநாடு யாழ்ப்பாண அரச அதிபர் அலுவலகத்தில் நாளை நடைபெறுகின்றது.
புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் நல்லூர் உற்சவ காலத்தில் இம்மாநாடானது ஓழங்கு செய்யப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த பொருத்தமான காலமாக இது அமைகின்றது என்றுவடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார். பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், கே.கே.எஸ்.சீமெந்து ஆலை, திக்கம் வடிசாலை ஆகியவற்றை மீள இயங்கச்செய்ய நடவடிக்ைக எடுக்கப்படுமெனவும் இதன்மூலம் ஏராளமான தொழில்வாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். வடக்கில் வருடாந்தம் அதிக சூரிய ஒளியைக்ெகாண்ட சீதோஷ்ண நிலையையுடனான காலநிலை நிலவுவதால், சூரிய மின்னுற்பத்தியை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விவரம்» |