புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

 
அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்வதே சிறந்தது

இனவாதம் பேசி வெற்றி பெற்றதை மறந்துவிட்டு

அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்வதே சிறந்தது

விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுரை

தேசிய இனப்பிரச்சினைக்கு மாகாணசபை முறைமையே மிகவும் சிறந்த தீர்வுத் திட்டம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் மிகச் சிறந்த அரசியல் பொறி முறையாக மாகாணசபை முறைமையை கருதுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத அரசியலை நடத்தியிருந்ததாகவும், அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு அபிவிருத்தித் திட்டங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத கொள்கைகள் கோட்பாடுகளை பின்பற்றியே மாகாணசபைத் தேர்தலில் வெற்றி யீட்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தோல்வி குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான சுதந்திரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழையாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சிங்கள அரசியல் கட்சிக்கு எதிராக தமிழ் அரசியல் கட்சி அடைந்த வெற்றியாக தேர்தல் வெற்றி சித்தரிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.