பாராளுமன்ற உறுப்பினரும், ஊடக அமைச்சின் மேற்பார்வை உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வர்,
பிரபல எழுத்தாளர் எம்.பி.எம். மாஹிருக்கு “நற்சிந்தனாபதி” எனும் சிறப்புப் பட்டத்தை
வழங்கி கெளரவித்துள்ளார்.
நேற்று மாலை வெள்ளவத்தை மெரைன் ஹோட்டலில் நடைபெற்ற மாஹிரின் மூன்று நூல்களின்
வெளியீட்டு விழாவின் போதே அஸ்வர் எம்.பி. அவருக்கு இப்பட்டத்தை வழங்கிக்
கெளரவித்தார்.