தலவாக்கலை டெவன் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஒருவர் பலி
தலவாக்கலை டெவன் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஒருவர் பலி
தலவாக்கலை
டெவன் நீர்வீழ்ச்சியில்
விழுந்து ஒருவர் பலி
நோட்டன் பிரிட்ஜ் தினகரன் நிருபர்
தலவாக்கலை பகுதியில் உள்ள டெவன் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஒருவர் பலியாகியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று நண்பகல் (16.09.13) வேளையில் இடம்பெற்றுள்ளதாக
அறிவிக்கப்படுகின்றது. மேற்படி சம்பவத்தில் 26 வயதுடைய டுரப் தோட்டத்தைச் சேர்ந்த
மகேஸ்வரன் என்ற இளைஞரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட சடலம் தற்போது கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது
விபத்தா? கொலையா? அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக பத்தனை பொலிஸார் மேலதிக
விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.