தினகரன்/வாரமஞ்சரி வாசகர் வட்டத்தின் பன்னிரண்டாவது வட்டம்
தினகரன்/வாரமஞ்சரி வாசகர் வட்டத்தின் பன்னிரண்டாவது வட்டம் பதுளையில் கடந்த
ஞாயிறு ஆரம்பித்து வைக்கப்பட்டது. விழாவினை பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர்
குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைப்பதையும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத்
தசநாயக்க, மாகாண அமைச்சர் எம்.செந்தில் தொண்டமான், முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ்,
செய்தியாசிரியர் விசு கருணாநிதி, உட்பட மாகாண சபை உறுப்பினர்களுடன் பண்டாரவளை -ஸ்ரீ
பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ பாலமூர்த்தீஸ்வரக்குருக்கள் ஆகியோர்
கலந்துகொண்டிருப்பதையும் காணலாம். இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக ஊவா தமிழ்
ஊடகவியலாளர் இணையத்தின் தசாப்த விழாவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்
முகம்மட் பாயிஸ், எம்.ஏ.எம்.ஹசனார், வாஹிட் ஏ.குத்தூஸ்)