மன்மத வருடம்
மார்கழி மாதம்
12ம் நாள்
ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437
ர.அவ்வல் பிறை
15
sunday december 27, 2015
சூடுபிடிக்கிறது வில்பத்து விவகாரம்
தேரர், அமைச்சர் ரிஷாத்
நாளை நேரடி விவாதம்
வில்பத்து வனம் அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்து பற்றிய இருதரப்பு
கலந்துரையாடலொன்று நாளை 28 ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில்
நேரடியாக இடம்பெறவுள்ளது. “சலகுன” எனும் அரசியல் நிகழ்ச்சியில் இந்தக் கலந்துரையாடல்
இடம்பெறவுள்ளது. இதில் தேசிய சங்க சம்மேள செயலாளர் சாகர தேரரும், அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பத்தியுத்தீன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
யாழ் வடமராட்சி கிழக்குக் கடற்கரைப் பகுதியில்
சுனாமியால் உயிரிழந்த 1028 பேரின் சமாதிகள் அமைந்துள்ள இடத்தில் நேற்று
நடைபெற்ற ஞாபகார்த்த நிகழ்ச்சியில் மக்கள் தம் உறவுகளுக்கு அஞ்சலி
செலுத்துகின்றனர். நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற பிரதேச சபை செயலாளர்
எஸ்.புத்திசிகாமணி தலைமைவகித்ததுடன், பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள்
முதலானோர் கலந்துகொண்டனர். (எஸ்.தில்லைநாதன், கரவெட்டி தினகரன் நிருபர்)
கூட்டமைப்பும்
பேரவையும் மோதும் விடயம்:
வாக்களித்த தமிழ் மக்களை
முட்டாள்களாக்கும் செயல்
-கந்தசாமி கருணாகரன் காட்டம்
தமிழ் மக்களது பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள்,
கைதிகள் விடுவிப்பு, காணிப் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் பேச வேண்டிய
நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய பேரவையும் தமக்குள்
ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டிப் பிரச்சினை
நத்தார் கொண்டாட யாழ். வந்தவரிடம் எம்மைப் பற்றி மூச்சும்
விடவில்லை
------தமிழ் அரசியல் கைதிகள் கவலை தெரிவிப்பு
நத்தார் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில்
இடம்பெற்ற விசேட வைபவங்களில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவிடம் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக அந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட
தமிழ்
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் புலம்பெயர் தமிழர்
அமைப்புக்கள்
தீர்வு வருவதை விரும்பாதோரே கூட்டமைப்பை சிதைக்க முயற்சி
பிரிவினையை ஏற்படுத்திவரும் குழுவினரே சமரச முயற்சியிலும்
ஈடுபடும் வேடிக்கை
புத்திஜீவிகள் குற்றச்சாட்டு
சில உள்ளூர் மற்றும் சர்வதேசத் தரப்புக்களின் தேவைகளுக்காக தமிழ் மக்களின் பலமான
அரசியல் சக்தியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி பலவீனப்படுத்த
புலம்பெயர் தமிழர் அமைப்புகள் பலவும் முயற்சித்து
கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசியில் பாரிய மோசடிஇடம்பெற்றுள்ளமை
தெரிய வந்துள்ளது. கொழும்பில் உள்ள கோடிஸ்வர வர்த்தகர் ஒருவர்