புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

ராசி பலன்...

மேஷம்

அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு எந்த வேலையிலும் நிதானம் வேண்டும். 5ல் குரு இருப்பதால் குழந்தைகள் நலனில் அக்கறை வேண்டும். பரணி நட்சத்திரகாரர்களுக்கு மிகவும் குழப்பமான காலம். புது முயற்சி செய்யலாமா? வேண்டாமா? என்று கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு எந்த வேலையிலும் வெற்றி உண்டு.

பெண்களுக்கு: குடும்பம் - வேலை இரண்டுமே, திருப்திகரமாக உள்ளது. தாய் வீடு ஆதரவு உண்டு. பொன் - பொருள் சேரும்.

உத்தியோகம்: எந்த வேலையாக இருந்தாலுத் சரி அரசோ, தனியார் வேலையோ நிதானம் தேவை. மற்ற சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். சற்று யோசித்து முடிவெடுக்கவும்.

தொழில்: கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. சக கூட்டாளிகளின் மதிப்பை பெறுவீர்கள். எந்த ஒரு புது முயற்சியும் இப்போது வேண்டாம்.

குழந்தைகள்: படிப்பு, வேலை, விளையாட்டு எதிலும் வெற்றி.

பரிகாரம்: முருகனுக்கு செவ்வாய் மற்றும் வியாழன் அரச்சனை செய்யவும்.

ரிஷபம்

கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு நல்ல காலம் இது. ரோகிணி மற்றும் மிருகஷீரிடம் நட்சத்திரகாரர்களுக்கு சுமாரான வாரம் இது. குடும்பம் / அலுவலகம் இரண்டுமே திருப்திகரமாக இருக்கும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் நீங்கள் எண்ணியது போல் நடக்கும். கணவன் - மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும்.

உத்தியோகம்: வேலைமாற்றம், பதவி உயர்வு இப்போது இல்லை. புதிய முயற்சி சற்று தள்ளி போடவும் அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

தொழில்: அயல் நாட்டு வியாபாரம் இப்போது வேண்டாம். புதிய வர்த்தக முதலீடு இப்போது வேண்டாம். கூட்டுத் தொழில் நன்றாக இருக்கும். பங்கு வர்த்தகம் சற்று தொய்வாக உள்ளது.

குழந்தைகள்: படிப்பு, வேலை, விளையாட்டு சற்று மந்தமாக இருக்கும்.

பரிகாரம்: எந்த ஒரு கிழமையாவது வாரத்தில் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும். சனிக்கிழமை சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றவும்.

மிதுனம்

இந்த வாரம் அலைச்சல் அதிகம் இருக்கும். வெளியூர் பிரயாணங்கள் உங்களை சோர்வடையச் செய்யும். உடல் ஆரோக்கியம் கவனம் தேவை. எந்த ஒரு செயலிலும் வெற்றி உங்களுக்கே. பொன் - பொருள் சேரும்.

பெண்கள்: கணவன் - மனைவி உறவு மற்றும் குடும்ப ஒற்றுமை ஓங்கும். தாய் வீடு ஆதரவு உண்டு.

உத்தியோகம்: வேலை, தனியார் மற்றும் அரசு தரப்பில் உள்ளவர்களுக்கு நல்லதொரு வாரம். என்றும் சுறுசுறுப்புடன் இருக்கும் இவர்கள் இந்த வாரம் அதிக சுறுசுறுப்புடன் காண்பீர்கள்.

தொழில்: அலைச்சல் அதிகம் இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் இருந்த போதிலும் வேலைப்பளு அதிகம் இருக்கும். பங்கு வர்த்தகம் அதிகம் லாபம் உண்டு.

குழந்தை: படிப்பு, வேலை, விளையாட்டு யாவுமே திறம்பட செயல்படும். உடல் ஆரோக்கியம் கவனம் தேவை.

பரிகாரம்: ராகு - கேதுவிற்கு வியாழன் அன்று பால் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யவும். வியாழன் அன்று குரு பகவானுக்கு 3 நெய் தீபம் ஏற்றவும்.

கடகம்

ஆயிலியம் நட்சத்திரகாரர்களுக்கு நல்ல காலம் இது. இருந்த போதிலும் அதிக மன குழப்பம் உண்டு. எந்த ஒரு வேலையிலும் குழப்பம் இருக்கும். பூசம் நட்சத்திரகாரர்களுக்கு தெய்வீக வேலை நிறைந்த வாரம். புனர்பூசம் நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியம் கவனம் தேவை.

பெண்களுக்கு: தாய் வீட்டில் கண்டிப்பாக உங்களுக்கு ஆதரவு உண்டு. வாரம் முழுவதும் சந்தோஷமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நன்கு தேறும். எந்த ஒரு முக்கிய முடிவும் இந்த வாரம் வேண்டாம்.

உத்தியோகம்: அரசு தரப்பில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலை உயர்வு உள்ளது. சிலருக்கு எதிர்பாராத பிரயாணம் காத்திருக்கிறது.

தொழில்: கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. தனியார் தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகள் லாபம் தரும். சிலர் தொலைதூர பிரயாணம் மேற்கொள்வர். பங்கு வர்த்தகம் ஓரளவுக்கு லாபம் உண்டு.

குழந்தைகள்: படிப்பு, வேலை, உடல் ஆரோக்கியம் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு 8 எள் தீபம் ஏற்றவும். ஆஞ்சநேயரை வழிபடுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு செவ்வாய்க்கிழமை அன்று அபிஷேகம் அர்ச்சனை செய்யவும்.

சிம்மம்

இந்த ராசியில் இருக்கும் மகம் நட்சத்திரகாரர்களுக்கு, உறவினர்களால் தொல்லை ஏற்படும். பூரம் நட்சத்திரகாரர்களுக்கு தகப்பனுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உத்தரம் நட்சத்திரகாரர்களுக்கு உடலுக்கு ஏதாவது மருத்துவ செலவு உண்டு.

பெண்கள்: சில பெண்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்கள் நல்ல முடிவிற்கு வரும். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படலாம். சிலருக்கு தெய்வீக பணியில் ஈடுபடும் பாக்கியம் கிடைக்கும்.

உத்தியோகம்: தனியார் பணியில் சிலருக்கு மனதில் ஏமாற்றம் உண்டு. யாதொரு விஷயத்திலும் கவனம் வேண்டும். பணி மாற்றம் தற்போது வேண்டாம். கடன் உதவி எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் வரலாம்.

தொழில்: நன்றாக இருக்கும் இவ்வாரம் வரவு - செலவுகள். கடன் பாக்கி வசூலாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பம் இப்போது வேண்டாம்.

குழந்தைகள்: வேலை வாய்ப்புகளில் வெற்றி நிச்சயம் உடல் நலத்தில் கவனம் வேண்டும்.

பரிகாரம்: வியாழனன்று குரு பகவானுக்கு 3 நெய் விளக்கேற்றவும்.

கன்னி

ஹஸ்தம் நட்சத்திரகாரர்களுக்கு புதிய நட்பு உண்டாகும். சித்திரை நட்சத்திரகாரர்களுக்கு, எந்த விதமான புதிய முயற்சியும் வேண்டாம். உத்தரம் நட்சத்திரகாரர்களுக்கு எந்தவித கவலையும் இன்றி சந்தோஷமான வாரம் இது.

பெண்கள்: கணவன், மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டு. கடன் சுமை குறையும் சிலருக்கு வீடு வாங்கவோ, விற்கவோ கூடும். தாய் வீடு சாதகமாக உள்ளது. சிலருக்கு தெய்வப் பணியில் ஈடுபடும் யோகம் உண்டு.

தொழில்: புதிய தொழில் முயற்சி கைகூடும். நண்பர்கள் உதவுவார்கள். கடன் சுமை குறையும். எந்த விதமான மனசஞ்சலமும் வேண்டாம். வாரம் முதலில் மனக்குறை இருந்தாலும் வார முடிவில் நன்றாகவே இருக்கும்.

உத்தியோகம்: வேலைமாற்றம் மனதிற்கு இதம் தரும். நண்பர்கள் உதவி உண்டு. மேலதிகாரிகளின் உதவி கண்டிப்பாக உண்டு. வெளியூர் பிரயாணங்கள் உங்களுக்கு வெற்றி தரும்.

குழந்தைகள்: படிப்பு, வேலை, உடல் நலம் யாவுமே நன்றாக இருக்கும்.

பரிகாரம்: வெள்ளி - செவ்வாய் ஆகிய இரு நாட்களிலும் துர்க்கைக்கு ராகுகால பூஜை செய்வது நல்லது. 9 பேருக்கு அன்னதானம் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும்

துலாம்

சித்திரை நட்சத்திரகாரர்களுக்கு வாரம் முழுவதும் குதூகலம் தான். விசாகம் நட்சத்திரகாரர்களுக்கு உறவினர், நண்பர்கள் வருகை அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரகாரர்களுக்கு உடல் நலத்தில் அக்கறை தேவை. வாரம் முழுவதுமே சுறுசுறுப்புடன் இருப்பீர்கள் புது நட்பு, உறவு ஆகியவை மனதிற்கு இதம் தரும்.

பெண்கள் -: பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே ஆதரவு தரும். மனதின் குழப்பங்கள் தீரும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். தொலைதூர செய்தி சந்தோஷம் தரும்.

வியாபாரம்: - தனியார், கூட்டுத் தொழிலில் எந்த மாறுதலும் இல்லை. அரசாங்க உதவி எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் விரிவாக்கம் இப்போது வேண்டாம். புது தொழில் முயற்சி சற்று தள்ளி போடவும்.

உத்தியோகம் -: அலுவலகத்தில் எதுவும் மாறுதல் இல்லை. மேல் அதிகாரிகள் சக ஊழியர்களின் ஆதரவு பெறுவீர் வேலை மாற்றம் முயற்சி இப்போது வேண்டாம். பணியில் மாற்றம் ஏதும் இல்லை.

பரிகாரம்: - வியாழன்று குருபகவானுக்கு 3 நெய்தீபம் ஏற்றவும் முருகன் ஸ்தலம் சென்று வரவும் 3 நபருக்கு அன்னதானம் செய்யவும்.

விருச்சிகம்

கேட்டை, அனுஷம் மற்றும் விசாக நட்சத்திரகாரர்களுக்கு இவ்வாரம் சிறப்பான வாரமாகும். இருந்த போதிலும் இவர்களுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்படலாம். சிலருக்கு சரும நோயினால் பாதிப்புகள் வரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

பெண்கள்: - குடும்ப ஒற்றுமை சிறப்படையும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு பொன், பொருள், ஆபரணங்கள் சேரும். பிறந்த வீட்டால் நன்மை உண்டு.

உத்தியோகம்: - சிலருக்கு வேலை மாறும் யோகம் உண்டு. புதிய வேலை மனதிற்கு திருப்தியை தரும். நண்பர்கள் உதவி செய்வார்கள். கடன் சுமை குறையும்.

தொழில்: - புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். பங்கு வர்த்தகம் லாபம் உண்டு. எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும். பண புழக்கம் அதிகரிக்கும். அரசு உதவி எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல காலம் இது.

பரிகாரம்: - விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்யவும்.

தனுசு

மூலம் நட்சத்திரகாரர்களுக்கு மனதில் புதிய தைரியம் உற்சாகம் பிறக்கும். பூராடம் நட்சத்திரகாரர்களுக்கு புதிய நட்பு, உறவு ஏற்படும். உத்ராடம் நட்சத்திரகாரர்களுக்கு சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். இதுவரை குருபகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

பெண்கள்: - இந்த ராசி பெண்களுக்கு புதுதைரியம், உற்சாகம் பிறக்கும். புகுந்த வீடு, பிறந்த வீடு இரண்டுமே சாதகமாக இருக்கும். ஆன்மீக பணியில் சிலர் ஈடுபடுவர். திருமணம், குழந்தை பாக்கியம் சிலருக்கு சந்தோஷத்தை தரும்.

வியாபாரம்: - கூட்டுத் தொழில், தனியார் தொழில் இரண்டுமே மனதிற்கு திருப்தி தரும். பங்கு வர்த்தகம் கைகொடுக்கும். கொடுக்கல் வாங்கல் சற்று ஏமாற்றத்தை தரலாம் எச்சரிக்கை தேவை.

உத்தியோகம்: - வேலைமாற்றம் இருக்கலாம். எதிர்பார்ப்பிற்கு மாறாக இருந்தபோதிலும் பாதிப்பு இருக்காது. மேல் அதிகாரிகள் சற்று கோபமாக இருக்கலாம். வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

பரிகாரம்: - புதன்கிழமை, வெள்ளிகிழமையில் பெருமாளுக்கு துளசி அர்ச்சினை செய்யவும். 9 நெய்விளக்கேற்றி 9நபருக்கு அன்னதானம் செய்யவும்.

மகரம்

உத்ராடம் நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியம் கவனம் தேவை. சிலருக்கு அறுவை சிகிச்சை வர வாய்ப்புண்டு. திருவோண நட்சத்திரகாரர்களுக்கு வேலை பளு அதிகமாகும். நண்பர்களுடன் கேளிக்கை உண்டு. அவிட்டம் நட்சத்திரகாரர்களுக்கு பணபுழக்கம் அதிகரிக்கும்.

பெண்கள் - கணவன், மனைவி உறவு சீராக இருக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். சிலருக்கு வீண் அலைச்சல் இருக்கும். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட கோளாறு வரலாம். வேலைக்கு செல்பவருக்கு பணிமாற்றம் உண்டு.

உத்தியோகம் - அரசு வேலையில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளால் தொல்லை உண்டு. தனியார் பணியில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் உதவி உண்டு. சிலருக்கு ஊதிய உயர்வு உண்டு.

வியாபாரம் - பண புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழில் தொல்லை இல்லை.

பரிகாரம்: - ராகு, கேதுவிற்கு முறையே வியாழன் மற்றும் செவ்வாய் கிழமைகளில் 4/7 தீபம் ஏற்றவும், 11 நபருக்கு வியாழனன்று அன்னதானம் செய்யவும்.

கும்பம்

அவிட்டம் நட்சத்திரகாரர்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும். சதயம் நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியம் தேறும், மருத்துவ செலவு குறையும். பூரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு குடும்ப ஒற்றுமை ஓங்கும். இந்த வாரம் கடன் பிரச்சினை குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

பெண்கள்: - கணவன், மனைவி உறவு மேம்படும் பிறந்த வீட்டால் பலன் உண்டு. சகோதர, சகோதரி உறவு நன்றாக இருக்கும். சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு கூடும். சிலர், பொதுபணியில் ஈடுபடுவர்.

வியாபாரம்: - கூட்டுத் தொழில் சீராக அமையும். எதுவும் ஏற்ற இறக்கம் இல்லை. கடன் தொல்லை தீரும். வியாபாரம் சிறப்பாக அமையும். பங்கு வர்த்தகம் கைகொடுக்கும் தனியார் தொழிலில் திருப்தி இருக்கும்.

உத்தியோகம் -: சீராக இருக்கும். பணியில் எதுவும் மாற்றம் இல்லை. தனியார், அரசு இரண்டுமே திருப்தி தரும். புது பணி மாற்றம் இப்போது வேண்டாம். நண்பர்கள் உங்களுக்கு தகுந்த நேரத்தில் உதவுவார்கள்.

பரிகாரம் -: வியாழனன்று குருபகவானுக்கோ அல்லது சிவபிரானுக்கோ 3 நெய்விளக்கேற்றி அர்ச்சனை செய்யவும்.

மீனம்

உத்ரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு சந்தோஷமான வாரம். பூரட்டாதி நட்சத்திரகார்களுக்கு மருத்துவ செலவு உண்டு. ரேவதி நட்சத்திரகாரர்களுக்கு மனதில் அமைதி உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும், வெளியூர் பிரயாணங்கள் வெற்றி தரும்.

பெண்கள்- :கணவன், மனைவி அன்பு நீடிக்கும். உறவினர் நண்பர்கள் சகோதர, சகோதரி ஆகியோர் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ செலவு குறையும்.

வியாபாரம் - : தொழிலில் லாபம் உண்டு. கூட்டுத்தொழில் நன்றாக இருக்கும். பணபற்றாகுறை இல்லை. கடன் சுமை குறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எண்ணங்கள் நிறைவேறும்.

உத்தியோகம் -: அரசு, தனியார் பணியில் மாற்றம் உண்டு. விரும்பிய இடம் கிடைக்கும். ஊதிய உயர்வும் உண்டு.எந்த ஒரு புதிய முயற்சியும் இப்போது வேண்டாம். வெளிநாடு வேலை வாய்ப்பு சிலருக்கு நன்மை தரும்.

பரிகாரம் -: வெள்ளிக்கிழமை மகாலெட்சுமிக்கு 6 நெய்தீபம் ஏற்றி அர்ச்சினை செய்யவும். 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.