கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை
தெரிய வந்துள்ளது. கொழும்பில் உள்ள கோடிஸ்வர வர்த்தகர் ஒருவர் ஊடாக கொழும்பு
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த அரிசி சுமார் 300 கொள்கலன்களில்
எங்குக் கொண்டு செல்லப்பட்டது என்பது பற்றி இதுவரை கண்டுப்பிடிக்கபடவில்லை என அரச
ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேற்படி இந்தப் பாரிய மோசடியில் மலையகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி
தொடர்புபட்டுள்ளமை விரைவில் அம்பலத்துக்கு வரும் என உள்ளகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கோடிஸ்வர வர்த்தகருடன் இணைந்து இந்த அரிசியை கொள்வனவு செய்வதற்கு இந்திய
நிறுவனத்துடன் மேற்படி அரசியல்வாதி செயற்பட்டார் என சொல்லப்படுகிறது.