இணைய தளத்தில் வெளியான சிம்புவின் ஆபாச பாடல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதனால்
சிம்புவும், அதற்கு இசை அமைத்ததாக கூறப்படும் அனிருத்தும் பல்வேறு அமைப்புகள்
மற்றும் பெண்கள் அமைப்பின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளனர்.
இந்த பாடல் பற்றிய கருத்துக்களால் அதை கேட்க விரும்புவோரின் எண்ணிக்கையும்
அதிகரித்து வருகிறது. ‘வாட்ஸ்–அப்’மூலம் இந்த பாடல் முன்பைவிட வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து கருத்து சொன்ன சினேகா ஒரு பாடலை பிரபலமாக்குவது நாம்தான். பெண்களை
பெருமையாக வர்ணிக்கும் பாடல்களும் இருக்கின்றன. ‘அடிடா அவள’ என்பது போன்ற பாடல்களும்
வந்து இருக்கின்றன. இதையெல்லாம் யாரும் கண்டு கொள்ளவில்லை.
இதை நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஒரு பாடலை பற்றி நாம் திரும்பத் திரும்ப
பேசுவதால் அதை பிரபலமாக்கிவிடுகிறோம். அந்த பாடல் ஹிட் ஆக நாம் காரணமாக இருக்கிறோம்.
தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் பாடலை நான் இதுவரை கேட்கவில்லை. பலர் என்னிடம்
அது பற்றி கேள்வி கேட்பதால் அந்த பாடலை கேட்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும்
வந்திருக்கிறது. அது தவறான பாடல் என்று தெரிந்த பிறகும் அது பற்றி ஏன் மீண்டும்
மீண்டும் பேச வேண்டும். பேசாமல் விட்டு விட்டாலே அந்த பாடல் பற்றிய பேச்சே
வந்திருக்காது.
என்றாலும் ஆபாச பாடல் என்பதால் ஒரு பெண் என்ற முறையில் இதுபோன்ற பாடல்களை
எதிர்க்கிறேன். குழந்தைகளும் பாடல்களை கேட்கிறார்கள். எனவே மோசமாக பாடல்களை
கேட்கிறார்கள். எனவே மோசமான வரிகளை பாடல்களில் திணிக்க வேண்டாம் என்றார்.
நல்ல நேரம் பார்க்கும் அனுஷ்கா
‘பாகுபலி’ படத்தில் அனுஷ்கா நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இதையடுத்து
‘ருத்ரமாதேவி’ படம் அனுஷ்காவை முன்னிலைப்படுத்தும் சரித்திர படமாக வெளிவந்தது.
அடுத்து ‘இஞ்சி இடுப்பழகி’ படமும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவே
இருந்தது.
ஆனால் இந்த 2 படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் வருத்தத்தில்
இருந்த அனுஷ்கா ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டார்.தற்போது அவர்களின் ஆலோசனைப்படி நல்ல
நேரம் பார்த்து தான் வீட்டை விட்டு வெளியே வருகிறார்.
நல்ல நேரம் பார்த்துதான் கேமரா முன்பு நிற்கிறார் என்கிறார்கள்.
அஜித் ஓவியம் வரையும் பார்வதி நாயர்
அஜித்தின் தீவிர ரசிகையான பார்வதி நாயர், இதை ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த
போது அஜித்திடம் தெரிவித்தார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த அஜித் படப்பிடிப்பின்போது அவரை அழகாக புகைப்படம் எடுத்தார்.
அதை பிரேம் போட்டு தனது அன்பளிப்பாக பார்வதி நாயரிடம் வழங்கினார். இதனால் உள்ளம்
நெகிழ்ந்த பார்வதி நாயர் அஜித்தை ஓவியமாக வரைந்து அவருக்கு கொடுக்க முடிவு செய்தார்.
தற்போது அஜித் ஓவியத்தை பிரமாண்டமாக வரைந்து வருகிறார். வித்தியாசமான கோணத்தில்
ஆஜித் படத்தை அவர் வரைந்து வருவதாக பார்வதி நாயரின் நெருங்கிய வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. இந்த ஓவியம் நிறைவு பெறும் கட்டத்தை நெருங்கி விட்டது. விரைவில்
அஜித்தை சந்தித்து ஓவியத்தை கொடுக்க பார்வதி நாயர் திட்டமிட்டுள்ளார்.
ரன்வீர் மீசையை வெட்டிய தீபிகா படுகோனே
ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து வெளிவந்துள்ள படம் ‘பாஜிராவ்
மஸ்தானி’. இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.போர் வீரனின்
காதலால் அவனது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை படமாக இயக்கியிருக்கிறார்கள்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்திற்காக ரன்வீர் முறுக்கு மீசை வைத்து வித்தியாசமான தோற்றத்தில்
நடித்திருந்தார். இப்படம் வெளியாவதையொட்டி இப்படத்திற்கான கெட்டப்பில் இதுவரை
இருந்த ரன்வீரின் மீசையை தீபிகா படுகோனே வெட்டியிருக்கிறார். இதன் வீடியோ தற்போது
இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரன்வீர் மீசையை வெட்டியதில் தீபிகாவுக்கு அப்படி ஒரு ஆனந்தம். அதன் பின் வெளியான
புகைப்படத்தில் மீசை, தாடி மிகவும் குறைந்த ரன்வீரைப் பார்க்க முடிகிறது. ஏற்கெனவே,
இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பல விஷயங்களை செய்திருக்கிறார்கள். அதேபோல் இந்த
வீடியோவும் படத்தின் விளம்பரத்திற்காகத்தான் என்று கூறப்படுகிறது.
விட்ட இடத்தை பிடிப்பாரா காஜல் அகர்வால்?
விக்ரம் தற்போது ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில்
நடித்து வருகிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இப்படத்தில்
விக்ரம் தாடி வைத்து வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு
‘மர்ம மனிதன்’ அல்லது ‘மாரீசன்’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள்
வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடித்து
வருகிறார்கள். இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் முதலில் காஜல் அகர்வால் நடிப்பார்
என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் காஜல் அகர்வால்
நீக்கப்பட்டிருக்கிறார்.ஆனால், தற்போது விக்ரம் அடுத்தாக திரு இயக்கத்தில் நடிக்க
இருக்கும் படத்திற்கு காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்
வெளியாகியிருக்கிறது.
படக்குழுவினரிடம் இந்த விஷயத்தை குறித்து விசாரித்த போது, அவர்கள்
மறுத்திருக்கிறார்கள். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்
வெளியாகும் என்று கூறியிருக்கிறார்கள்.விக்ரமுடன் நடிக்க இருந்த முதல் வாய்ப்பை
தவறவிட்ட காஜல் அகர்வால், தற்போது அந்த வாய்ப்பை பிடிப்பாரா? என்று ரசிகர்கள்
மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.