வில்பத்து வனம் அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்து பற்றிய இருதரப்பு
கலந்துரையாடலொன்று நாளை 28 ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில்
நேரடியாக இடம்பெறவுள்ளது. “சலகுன” எனும் அரசியல் நிகழ்ச்சியில் இந்தக் கலந்துரையாடல்
இடம்பெறவுள்ளது. இதில் தேசிய சங்க சம்மேள செயலாளர் சாகர தேரரும், அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பத்தியுத்தீன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
தன்மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை நிரூபிக்க பகிரங்க விவதாத்திற்கு வருமாறு அமைசச்சர்
றிசாத் பதியுத்தீன் மாத்தறை ஆனந்த தேரருக்கு விடுத்த பகிரங்கச் சாவாலை தேரர் ஏற்றுக்
கொண்டு விவதாத்திற்கு வருவதற்கு அவர் சம்மதித்துள்ளார். இதனையடுத்து தேரர் உடன்
விவாதிப்பதற்கு அமைச்சரும் முன்வந்துள்ளார்.