புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

 
250 கோடி கேட்கும் வளைகுடா மன்னரின்

250 கோடி கேட்கும் வளைகுடா மன்னரின்

~~என்கணவர் என் தோழன். அவர் மிகவும் அன் பானவர், நேர்மை யானவர், கண்ணியம் மரியாதை மிக்க ஒரு விசேசமான மனிதர். எங்கள் வாழ்க்கை இன்ப மயமாகவே இருந்தது. அவரது சகோதரர் திடீரென ஒரு நாள் என்னை மாளிகையை விட்டு வெளியேற்றும் வரை. அவர் சுகவீனராகும் வரை நாங்கள் தொடர் பிலேயே இருந்தோம்.”

“எங்கே போகுதோ வானம், அங்கே போகி றோம் நாமும்” என்று ஓரளவு இன்பமாகவே போய்க்கொண்டிருந்த அவளின் மணவாழ்வில் அன்றொருநாள், 1970 கடைசியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது. முடிந்தது தன் வாழ்வு என்று நினைக்குமளவு அது அவளைத் தள்ளியது.

எந்த காரணமும் கூறாது கணவர் இளவரசரின் சகோதரரினால் இரண்டு மணி நேர அவகாசத்தில் அவள் மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டாள். இல்லை துரத்தப்பட்டாள்.

அவளது திருமண அத்தாட்சிப் பத்திரம், நகைகள், ஆபரணங்கள், புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன. உடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவள் அமெரிக்காவிற்கு அஞ்சாதவாசம் செல்லுமாறு பணிக்கப்பட்டாள்.

“மீண்டும் நான் அங்கு வர முடியாது என்றே நினைத்தேன்.” இளவரசர் அவளோடு தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அவள் வெளியில் இருப்பதுதான் நல்லது என்று அவரும் கூறினார். ஏன் மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டீர்கள் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்ல மறுக்கும் அவர், தகுந்த நேரத்தில் நீதி மன்றத்தில் அதனைக் கூறுவேன் என்கிறார்.

அமெரிக்காவில் நண்பர்கள் இன்றி குடும்பம் இன்றி ஒரு மாதிரியான வாழ்க்கையை வாழ்கையில், தான் மன நோயாளி ஆகிவிடுவோமோ என்று அவள் அஞ்சினாள். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கழிந்தன.

இளவரசர் மீண்டும் அவளை அழைத்தார். “அந்த வருடம் அவரை நான் மூன்று முறை சந்தித்தேன். இரு முறைகள் அவரது நாட்டிலும் ஒருமுறை லண்டனிலும். அவர் இன்னும் என்னை விவாகரத்து பண்ணாததால் அவர் மனைவியாகவே நான் செயல்பட்டேன். இந்த வாழ்க்கை முறை எனக்கு சலித்தது. நான் பிள்ளை குட்டி என்று குடும்ப வாழ்க்கை விரும்பினேன்”

“இறுதியாக அவரை நான் ஜனவரி 1974ல் சந்தித்தேன். இச் சந்திப்பு என் வாழ்க்கையில் இன்னொரு திருப்பத்தைத் தந்தது. அப்போது அவர் தனது நான்காவது மனைவியை மணந்திருந்தார். சேர்ப்பதும் விலக்குவதும் அவருக்கு வாடிக்கை என்றும் நான் அறிந்திருந்தேன்.”

“ஓரளவு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான், பெய்ரூத்தில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவ வழக்கறிஞரைத் திருமணம் செய்ய விரும்புவதாகவும் குழந்தைகள் வேண்டும் என்றும் கூறினேன். அவர் மறுக்கவில்லை. விவாகரத்து என்று எதையும் பேசவில்லை. என்னை கட்டித் தழுவி வாழ்த்தி வழி அனுப்பினார்.” அத்திருமணம் இரண்டு குழந்தைகளைத் தந்ததோடு 5 ஆண்டுகளில் முறிந்தது. இப்போது மீண்டும் அவளும் இளவரசமும் அடிக்கடி பேசினர், தொடர்பு கொண்டனர். இளவரசர் ஐரோப்பாவில் அவளது குழந்தைகளின் படிப்பிற்கு உதவினார்.

1982இல் இளவரசர் மன்னர் ஆனார். இக்காலங்களில் அவரது வெளிநாட்டு சுற்றுப் பயண குழுவில் ஒருவராக அவளும் சேர்க்கப்பட்டாள்.

“1995இல் நான் எனது இரு மகள்களுடன் அவரை சந்திப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக அவர் பக்க வாதத்தால் தாக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அதன் பின் நான் அவருடன் பேசவே இல்லை. அவர் இறுதி வரை என்னை விவாகரத்து செய்யாததால் நான் அவர் மனைவி. ஆகவே அவர் தேக ஆரோக்கியம் உள்ளவராக இருந்திருந்தால் அவரது வாக்கைக் காப்பாற்றி எனக்கு சேரவேண்டியதை தந்திருப்பார்” என்கிறார் ஜனன்.

அவர் இப்போது கேட்பது என்ன? 12 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்கள்.

மன்னர் தன் ஆயுள் முழுக்க தனக்கு செலவிற்கு பணம் தருவதாக வாக்களித்திருந்ததாக அவர் நோய்வாய்பட்ட பின் அது நிறுத்தப்பட்டதாகவும் அதனைக் கேட்டு லண்டன், அமெரிக்க நீதி மன்றங்களில் போடப்பட்ட வழக்குகள் போதிய முகாந்திரம் இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டன. மன்னரின் சட்டப்படியான இரண்டாவது மனைவி தானே என்றும் ஆகவே அவரது சொத்தில் 1/16 பங்கு தனக்குத் தர வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவள் கேட்டாள்.

அவளிடம் திருமண உறுதிப் பத்திரமோ, படங்களோ இல்லை. அவள் தந்த ஆவணங்கள் திருப்தியானவை அல்ல என்று நீதி மன்றம் கூறியது.

ஜனன் தனது இரண்டாவது திருமணத்தின் மூலம் மன்னரின் மனைவி என்ற தன் நிலையைக் குழப்பிக் கொண்டாள்.

அதுபற்றிக் கூறும்போது இளவரசர் தன்னை மணந்தது ஷரியா முறையில் என்றும் அடுத்தது சிவில் முறையில் நடந்த திருமணம் அது சட்டப்படி முறிந்தது என்றும் இளவரசர் தனது இறப்பு வரை தன்னை விவாகரத்து செய்யவில்லை ஆகவே தான் அவர் மனைவி என்றும் அவர் மன்னராக இருந்த காலத்தில் அவரது குழுவில் ஒருத்தியாக வெளிநாட்டு பயணங்களில் சென்றதாகவும் மனைவியாக நடந்து கொண்டதாகவும் கூறியது அவள் வழக்கிற்கு வலு சேர்க்கவில்லை. மாறாக இஸ்லாத்தில் பெண்கள் பலதார மணம் செய்ய அனுமதி இல்லை. இளவரசரிடமிருந்து விவாகரத்து பெறாமல் இவள் அடுத்த திருமணம் செய்தது சட்டப்படி தவறு. அதற்கு அனுமதி கொடுத்த இளவரசர் இவளை மணவிலக்கு செய்யாதது தவறு. அப்படியானால் இவள் மீண்டும் தனது மதத்திற்கு மாறிவிட்டாளா என்ற பல கேள்விகள் எழுந்தன. ஆனாலும் நீதி மன்றத்தில் மன்னருக்கும் அரச குடும்பத்திற்கும் எதிராக அவள் தாக்கல் செய்த விபரங்கள் பாரதூரமானவை. ஆகவே அவைகளை திரும்பப் பெற்று அதனைத் தன்னிடம் தரவேண்டும் என்றும், இனிமேல் அரச குடும்பத்திற்கு அவமானம் தரும் எக்காரியமும் செய்ய மாட்டேன் என்ற உத்திரவாதமும் தரவேண்டும் என்றும் அதற்கு ஈடாக 12 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்களும், செல்சீ பகுதியில் இரண்டு தொடர் மாடி வீடுகளை அவள் இரு மகள் பெயருக்கும் எழுதித் தருவதாகவும் 2003ஆம் ஆண்டு மன்னரின் மகன் லண்டன் டோசெஸ்டெர் ஹோட்டலில் அவ ளைச் சந்தித்து செய்த ஒப்பந்தப்படி அவள் நடந்ததாகவும், ஆனால் அவர்கள் இன்றுவரை எதுவும் செய்யவில்லை என்று லண்டன் உயர் நீதி மன்றத்தில் அவள் போட்ட வழக்கு ஜூன் 9ஆம் திகதி அவளுக்கு சாதகமாக முடிந்தது உலகைப் பரபரப்புக்குள் ளாக்கியது.

மன்னருக்கு விதி விலக்கு (statலீ iசீசீunity) உண்டு, அதன்படி அவர் மீது பிரிட்டனில் வழக்கு தொடர முடியாது என்ற மன்னர் தரப்பு வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை. பதவியில் இருப்ப வர்க்கு தான் விலக்கு உண்டு. பதவி துறந்தவருக்கோ இறந்தவருக்கோ அது இல்லை என்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கு பற்றி ஜனனின் வழக்கறிஞர் மந்தீர் கஉர்விர்தீ (இந்திய பஞ்சாபி பெண்) கூறும்போது “மறைந்த மன்னரின் மகன் இளவரசர் தான் ஜனனோடு செய்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்கிறார். ஆனால் மன்னர் மீது வழக்கு தொடுக்க பிரிட்டிஷ் நீதி மன்றத்திற்கு அனுமதி இல்லை என்று மட்டுமே வாதாடினார்”

“அத்தோடு பதவியில் இருந்து இறந்த மன்னருக்கு எப்படி விதி விலக்கு உண்டோ அதுபோல் அவர் வாரிசுகளுக்கும் உண்டு. ஆகவே இளவரசர் மீதும் வழக்கு போட முடியாது என்று வாதிட்டார். அவர்களது வாதங்கள் அனைத்துமே இன்று உடைக்கப்பட்டன” என்று கூறினார்.

மறுபுறத்தில் 1974 பிற்பகுதியில் பிறந்த தனது மூத்த மகளுக்கு மன்னர் தந்தையாக இருக்கலாம் என்று அவள் மன்னரின் இரத்த மரபணு ளினிதி கேட்டு நின்றதற்கு அரச குடும்பம் செவி சாய்க்கவில்லை. இப்போது அதுவும் நீதிமன்றத்திற்கு போய் அனுமதி கிடைத்து ஒருவேளை உறுதி செய்யப்பட்டு விட்டால் அவளும் இளவரசியாகி விடுவாள். பெரிய சொத்திற்கும் அதிபதியாகி விடுவாள்.

ஜனன் மன்னரோடு தனக்கு இருந்த உறவு பற்றியும் அரச குடும்பம் பற்றிய பல தகவல்களை உள்ளடக்கி “ஹிhலீ றிing anனீ யி” “மன்னரும் நானும்” என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். பல பதிப்பாளர்கள் அதற்கு விலை பேசும் நேரத்தில் ஹாலிவுட் தயாரிப்பாளர் களும் அதனைப் படமாக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

“என்ன 12 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்கள்? அது என்ன பெரிய பணமா? அவர்களின் குடும்பத்தின் ஒரு வார துணி சலவை செய்வ தற்கான செலவு. அது அவர்களின் பணமும் அல்ல, என் உழைப்பிற்கான ஊதியம்.” இப்படிச் சொல்கிறார், லண்டனில் வசிக்கும் ஜனன் ஜோர்ஜ் ஹர்ப்.

ஜனன் கதையல்ல நிஜம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.