புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
புற்று நோயை முற்றாக குணப்படுத்தலாம்

புற்று நோயை முற்றாக குணப்படுத்தலாம்

புற்றுநோய் ஒவ்வொரு மனிதனையும் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கும் கொடிய நோய். ஒரு கால கட்டத்தில் இதற்கு சிகிச்சையேயில்லை என்றிருந்த நிலை மாறி இன்று இதற்கான தடுப்பூசிகளும், சிறந்த சிகிச்சை முறைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் முற்றிய நிலையிலுள்ள புற்று நோயாளர்களுக்கான ஆதரவு இல்லம், வறுமைக்கோட்டிற்கு கீழேயிருக்கும் புற்று நோயாளிகளுக்கு கட்டணமில்லா மற்றும் குறைந்த கட்டண சிகிச்சை, தொடர்பராமரிப்பு மற்றும் விரிவான கண்காணிப்பு என மருத்துவ சேவையை பொதுநல நோக்குடன் கலந்து வழங்குவதில் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் மருத்துவமனை தான் சென்னையில் இருக்கும் காமாட்சி மருத்துவமனை இவ்வெற்றியின் பின்னணி குறித்தும் புற்றுநோய் குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதில் தருகிறார். இயக்குநரும், புற்றுநோய் சத்திர சிகிச்சை நிபுணருமாகிய திரு டி ஜி கோவிந்தராஜன்.

முதலில் புற்றுநோய் என்றால் என்ன? என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக கட்டிகளைத்தான் ஆங்கிலத்தில் டியூமர் என்று சொல்வார்கள். நமது உடலில் இரண்டு வகையான டியூமர்கள் உண்டு. ஒன்று பிநைன் டியூமர் (கிலீnign tuசீor)மற்றொன்று மாலிங்னட் டியூமர் (சீalingnant tuசீor) இந்த இரண்டு வகைகளில் இரண்டாவதாக சொல்லப்படும் மாலிங்கனட் டியூமரைத்தான் கான்சர் என்றும் தமிழில் புற்றுநோய் கட்டிகள் என்றும் குறிப்பிடுகிறோம். திசுக்களில் இருக்கும் செல்கள் எதிர்பார்த்த அளவை விட மிக அதிகளவில் பெருக்கமடைவதால் தான் கட்டி உருவெடுக்கிறது. அதனால் தான் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் கட்டியாகத்தான் உருவாகவேண்டும் என்றில்லை. வேறு நிலைகளில் கூட அவை உருவாகும்.

மார்பக புற்றுநோய் தாக்கியிருக்கிறதா என்பதை கண்டறியவே இவ்வகையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு முன் குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்காத பெண்களுக்கும், பரம்பரையின் காரணமாகவும் திருமணமே செய்து கொள்ளாத பெண்களுக்கும், இரட்டைச் சகோதரிகளில் ஒருவருக்கும் என பலருக்கும் இந்நோய் தாக்கி வருவதை ஆய்வுகள் உறுதி செய்து வருகின்றன.

அதே தருணத்தில் பத்து குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களுக்கும் இவை வருகின்றன. பொதுவாக பெண்கள் குளிக்கும் போது தங்களது மார்பகங்களை தொட்டு சீராக அழுத்தி பார்க்கவேண்டும். எங்கேனும் கட்டிகள் இருப்பதுபோன்று உணர்ந்தால் உடனடியாக அல்ட்றா சவுண்ட் பரிசோதனையை செய்து அது என்ன என்று உறுதிசெய்து கொள்ளவேண்டும். மம்மோகிராம் சோதனையை ஏன் ஆரம்ப கட்டத்தில் மேற்கொள்ளக்கூடாது. என்றால் அது றேடியேசன் கொண்டது. ஆனால் அதே தருணத்தில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களாக இருந்தால் இந்த மம்மோகிராபி பரிசோதனையை செய்துகொள்ளலாம். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே முப்பது வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மம்மோகிராம் பரிசோதனையை செய்ய வேண்டும்.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வந்து விட்டதா என்பதை துல்லியமாக கண்டறிய எஃப் என். ஏ. சி என்ற பெயரிடப்படடுள்ள ஒரு பரிசோதனையை செய்வார்கள். இந்த பரிசோதனையில் மார்பக புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டால், அது உடலில் வேறு எங்கும் பரவியிருக்கிறது என்பதை கண்டறிய சி.டி.ஸ்கேன், எம். ஆர். ஐ. ஸ்கேன் மற்றும் மம்மோகிராம் பரிசோதனையை செய்வார்கள். பரிசோதனையின் முடிவில் திசுக்கள் வேறு எங்கும் பரவயில்லை என்று உறுதி செய்துவிட்டால் பிரெஸ்ட் கன்சர்வேசன் என்று அழைக்கப்படும் லம்படக்டமி என்ற சத்திர சிகிச்சையை செய்வார்கள். அதன் பின் தொடர்ச்சியான கண்காணிப்பும், பராமரிப்பும் இருந்தால் போதுமானது. குணப்படுத்திடலாம். ஆனால் திசுக்கள் மார்பகப் பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு பரவியிருந்தால் மாஸ்டக்டமி எனப்படும் மார்பகத்தை முழுவதுமாக அகற்றும் சத்திர சிகிச்சையை செய்வார்கள். இதன் மூலம் உடலில் வேறு பகுதியில் பரவியிருக்கும் புற்றுநோய்க்கான செல்களும் அழிக்கப்படுகின்றன. ஒரு சிலருக்கு றாடிக்கல் மாஸ்டக்டமி மற்றும் டொய்லெட் மாஸ்டக்டமி எனப்படும் சத்திர சிகிச்சையும் தேவைப்படும் அதன் பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அப்பகுதியை சீராக்கிக்கொள்ள இயலும். அதன் பின்னர் கீமோதெரபி சிகிச்சையையும் தொடரவேண்டும்.

அனைத்து வகை புற்றுநோய்களையும் குணப்படுத்த சத்திர சிகிச்சை கீமோதெரபி மற்றும் றேடியேசன் சிகிச்சை என மூன்று விதமான சிகிச்சை முறைகள் அவசியமாகின்றன. சத்திர சிகிச்சை செய்தால் முழுமையான பலன் கிட்டும். சத்திர சிகிச்சை செய்யாமல் கீமோதெரபி மற்றும் றேடியேசனைப் பயன்படுத்தினால் எதிர்பார்த்த வெற்றிவீதிம் கிடைக்காமல் போகக்கூடும்.

அத்துடன் எப்பகுதியில் றேடியேசன் சிகிச்சை செய்கிறோமோ அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் இதன் தாக்கம் தெரியும் ஆனால் புற்றுநோயை குணப்படுத்தவேண்டும் என்றால் நாங்கள் டியூமர் போர்டு என்ற ஒன்றை கடைப்பிடிக்கிறோம் அதில் மூன்று பிரிவுகளைச் சார்ந்த நிபுணர்களும் பங்குபற்றியிருப்பார்கள். அவர்கள் தான் தீர்மானிப்பார்கள். நோயாளியை குணப்படுத்த எவ்வகையான சிகிச்சை முடிந்த பிறகு ஹிஸ்ட்ரோ கெமிஸ்டரி என்ற பரிசோதனைக்குட்படுத்துவோம். அந்த பரிசோதனையில் ஹார்மோன்கள் மூலமாகத் தான் புற்றுநோய் வந்திருக்கிறது அல்லது பாதிக்கப் பட்டிருக்கிறது என்றால் ஹார்மோன் தெரபியையும் வழங்குவோம்.

பெருங்குடலில் புற்றுநோய் வராமல் இருக்கவேண்டுமானால் ஃபைபர் ஃபுட்டயட்டை கடை பிடித்தால் போதும். தெற்காசி யர்களுக்கும், மேலைத்தேய நாட்டவர்களுக்கும் உணவு பழக்க வழக்கத்தில் இருக்கும் வேறுபாடே இந்த பெருங்குடல் புற்றுநோய்க்கு மூலகாரணம் அதாவது மேலை நாட்டவர்கள் ரெட் மீட் எனப்படும் மாட்டிறைச்சியை உணவில் சேர்த்துக் கொள்வர். அதே தருணத்தில் நார்ச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளாமலிருப்பர். இவ்விரண்டு காரணங்களால் தான் அவர்கள் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் தற்போது மாறி வரும் உணவுப் பழக்கத்தால் தெற்காசியர்களுக்கும் இவ்வகையான புற்றுநோய்க்கு ஆளாகி வருகின்றனர்.

இதுவும் ஒரு றேடியேசன் செலுத்தும் சிகிச்சை தான் ஐ.ஜி.ஆர்.டி, ஐ.எம்.ஆர்.டி, சி.ஆர்.டி போன்று சைஃபர் நைஃபர் என்பதும் ஒரு றேடியேன் சிகிச்சையாகும். இந்த சைஃபர் நைஃபர் முன் எக்ஸ் நைஃப் என்றொரு றேடியேசனும் இருந்தது.இன்னும் துல்லியமாக விளக்க வேண்டுமானால் கட்டிகள் செ.மீ.அளவுகளில் இருந்ததால் அதற்கு சைஃபர் நைஃப் சிகிச்சை முழு பலனைத்தரவல்லது. அதுமட்டுமல்ல தெற்காசியாவில் இதனை பயன்படுத்த பெரும்பாலும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஏனெனில் இங்கு சிகிச்சைக்கு வரும்போதது கட்டிகளின் அளவு ஐந்து செ.மீ. அளவுகளை கடந்த நிலையிலேயே சிகிச்சைக்கு வருகிறார்கள்.

அதனால் அவர்களுக்கு சைஃபர் நைஃப்பை பயன்படுத்த முடிவதில்லை அதனால் தற்போது பெரும்பாலானவர்கள் சைஃபர் நைஃபை விட ஐ. ஜி. எம்.ஆர்.டி. யையே பெரிதும் பயன்படுத்தி குணப்படுத்தி வருகிறார்கள். கர்ப்ப பை வாய் புற்றுநோய் வருவதற்கு காரணம் நம் உடலில் பாப்பிலோமா வைரஸ் எனும் நுண்கிருமி உட்புகுவதால் தான் அதிகளவில் உடலுறவு வைத்துக்கொள்கிறவர்களுக்கும் அதிகளவில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கும் இவ்வகையான புற்றுநோய் வருவதாக ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. பாப்பிலோமா வைரஸை தடுப்பதற்காக தற்போது தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுவாக ஒவ்வொரு பெண்களும் திருமணத்திற்கு முன் போட்டுக்கொள்வது தான் சிறந்த பலனையளிக்கும்.

இலங்கையிலிருந்து அரசாங்க அனுசரணையுடன் வரும் நோயாளிகளுக்கு நாங்கள் அவர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு சலுகைகளை வழங்கத்தயாராக இருக்கிறோம். அது நோயாளியைப் பொறுத்தும், நோயின் தன்மையைப் பொறுத்ததும். நோயாளிகளின் பொருளாதார பின்னணியை பொறுத்தும் எங்களின் சலுகை உயரும். மேலும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 00919500055381, 00919381030712 மின்னஞ்சல் முகவரி - [email protected] , Web- www.drkmh.com

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.