இந்திய உதவிகளைப் பெறுவதில் மலையக மக்களும், முஸ்லிம் மக்களும் சில சிரமங்களை
எதிர்நோக்குவதாக எமக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த பிரச்
சினைகள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு நாங்கள் பார்த்துக்கொள்வோம் என இந்திய வெளி
விவகார செயலாளர் திருமதி சுஜாதா சிங், இலங்கை ஊடகவியலாளர்களை புதுடில்லியிலுள்ள
அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இந்திய உதவிகள் சரிவர
கிடைப்பதில்லை என்ற முறைப்பாடு எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பில்
நாங்கள் கூடிய கவனம் செலுத்துவோம். அதேவேளை, மலையக தமிழர்கள், கிழக்கிலங்கை,
புத்தளம் பகுதிகளிலுள்ள முஸ்லிம்களுக்கு நாங்கள் வீட்டுத் திட்டத்தினை
ஆரம்பித்திருக்கிறோம். எனவே, அவர்களை நாங்கள் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை.
நீண்ட காலமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் உரிய உதவிகளை நுரித கதியில் முன்னெடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
இவை அனைத்துமே காலப்போக்கில் கிரமமாக கிடைக்கும் என்றார்.