மக்கள் சேவைக்காக எனது வாழ்நாளை அர்ப்பணித்துச் சேவையாற்றிவரும் நான் ஆளுங்கட்சியில்
அதிகாரம் மிக்கதோர் இரும்புக்கரமாக உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி சேவை செய்ய
வந்துள்ளேன். இதற்குத் தலைநர் வாழ் தமிழ் மக்கள், தமது ஒற்றுமையையும், பலத்தையும்
உலகறியச் செய்யும் வகையில் என்னைத் தெரிவு செய்ய வேண்டும் என எதிர்வரும் மாகாண சபைத்
தேர்தலில் கொழும்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளரான கந்தசாமி
கருணாகரன் வாரமஞ்சரிக்கு வழங் கியுள்ள விசேட பேட்டியில் தெரிவித்தார். ஜனாதிபதியின்
நேரடியான வேட்பாளராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்டத்தில்
போட்டியிடும் ஒரேயொரு தமிழ் வேட்பாளருமாகிய என்னைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதன்
மூலம் அரசாங்கத்தின் சகலவிதமான அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் தமிழ் மக்களையும்
பங்குதாரர்களாக்குவேன் எனவும் கருணாகரன் தெரிவித்தார்.
(கருணாகரனின் முழுமையான பேட்டி இரண்டாம் பக்கத்தில்)