தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது குறித்து எமது
தலைவர் அமைச்சர் ஹக்கீம், ஜனாதிபதியிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி
அவர்களும் அது குறித்துத் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார். அதனால் இது குறித்த
விடயம் ஒரு பொருட்டல்ல என்று மு.காவின் அரசியல் துறைப் பொறுப்பாளர் எச்.எம்.ஹரீஸ்
தெரிவித்தார். அரசாங்கத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையே சுமுகமான நல்லுறவு
காணப்படுவதாகவும், எவ்விதமான முரண்பாடுகளும் தமக்கிடையே கிடையாது எனவும் தெரிவித்த
ஹரீஸ் எம்.பி, மு.கா தனது தனித்துவத்துடன் எதிர்காலத்திலும் தொடர்ந்தும் செயற்படும்
எனவும் தெரிவித்தார்.