புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
என் மீது ஒழுக்காற்று நடவடிக்கையா? மாவை மீது லோகசிங்கம் சீறிப் பாய்ச்சல்

என் மீது ஒழுக்காற்று நடவடிக்கையா? மாவை மீது லோகசிங்கம் சீறிப் பாய்ச்சல்

தமிழரசுக் கட்சி மீதே ஒழுக்காற்று விசாரணை தேவையாம்

பருத்தித்துறை பிரதேச சபையின் உப தலைவர் மாணிக்கம் லோக சிங்கம் மீது ஒழுக்காற்று விசா ரணை ஒன்றை மேற்கொள்ள வுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித் துள்ளார். இது தொடர்பாக அவரால் லோகசிங் கத்திற்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் லோக சிங்கம், மாவை சேனாதி ராஜா விற்குப் பகிரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுள் ஒரு பிரிவினரை இன்றும் சிறுபான்மைத் தமிழராக அதாவது தீண்டத்தகாதவர்கள் எனப் பிரித்துப் பார்க்கும் உங்கள் கட்சியின் தலை மைகள் குறித்தே முத லில் விசாரணை நடத் தப்பட வேண்டும் என லோகசிங்கம் தனது கடிதத் தில் குறிப்பிட்டுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.