தென்னாபிரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து போராடிய
பெரும் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறுதி கிரியைகள் இன்று அவர் பிறந்த கிராமத்தில்
நடைபெறுகிறது. கடந்த 5ம் திகதி அன்னார் தன்னுடைய 95 வது வயதில் இயற்கை எய்தினார்.
அவருடைய ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்காக கடந்த 11ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அஞ்சலி நிகழ்வில் 91 நாடுகளைச் சேர்ந்த இராஜ தந்திரிகள் கலந்து கொண்டமை சரித்திரப்
பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாக கருதப்படு கின்றது. ஓர் இன விடுதலையைப் பெற்றுத் தந்த
பிதாவென்று போற்றப்படும் நெல்சன் மண் டேலாவின் உருவச்சிலையொன்று நாளை தென்னாபிரிக்கா
யூனியன் கட்டட சதுக்கத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத் தக்கது.