புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
மாணவர், சுற்றுலா விஸாவில் சென்று புகலிடக் கோரிக்கை

மாணவர், சுற்றுலா விஸாவில் சென்று புகலிடக் கோரிக்கை

கடும் நடவடிக்கை என பிரித்தானியா எச்சரிக்கை

அதிகளவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மாணவர் அல்லது சுற்றுலா விஸாவில் நாட்டுக்குள் பிரவேசித்தவர்கள் என பிரித்தானியா அறிவித்துள்ளது.

சுற்றுலா அல்லது மாணவர் விஸா அடிப்படையில் நாட்டுக்குள் பிரவேசித்த அதிகளவான இலங்கையர்களே பின்னர் புகலிடம் கோரி விண்ணப்பிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 7445 புகலிட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசித்து பின்னர் புகலிடம் கோருவதாக பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1951ம் ஆண்டு உலக புகலிடக் கோரிக்கையாளர் பிரகடனத்திற்கு அமைவாக பிரித்தானியா கடும் நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.